Wednesday, January 28, 2015

THALIA SA

THALIA SA
49 Rue Regalle 77181 Courtry
Courtry
FRANCE
+33 164 51 10 56

Wednesday, January 21, 2015

aboriginal race, o

E usual festival was given at Arivaca, and all the neighbors within a hundred miles invited. In 1858 the business of the Territory resumed its former prosperity, and the sad events of the "Crabb Expedition" were smoothed over as far as possible. The government had subsidized an overland mail service at n

Tuesday, May 7, 2013

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்துக்கு அருகாமையில் காணி விற்பனைக்கு உண்டு.

இலக்கம் 97 புளக் ஜே கிழக்கு-2 இல் பாதை ஓரத்துக்கு அண்மையில் 9.5 பேர்ச் காணித் துண்டு ஒன்று சகல வசதிகளிடமும் விற்பனைக்கு உண்டு.விலை பேசித் தீர்மானிக்கபடும்.. தொடர்புகளுக்கு - 0773880001

Wednesday, April 17, 2013

கொழும்பு சாஹிராக் கல்லூரியை பாதுகாப்போம்


இலங்கை அரசாங்கத்தின் மூன்று இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது


(Adt) இலங்கை அரசாங்கத்தின் மூன்று இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தம்மை “பங்களாதேஸ் கிறே ஹட் ஹக்கேர்ஸ்“ என்று அறிமுகம் செய்துள்ளவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். 

இந்த சைபர் தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற சபை முதல்வரின் இணையத்தளம், தேசத்திற்கு கண்காட்சி இணையத்தளம் என்பன முடக்கப்பட்டன. 

இஸ்லாம் மதத்தை அவமதிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக, சைபர் தாக்குதலை நடத்தியவர்கள் அறிவித்துள்ளனர். 

இஸ்லாம் அவமதிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். உங்கள் மதத்தை அவமதிக்காத போது, இஸ்லாமை ஏன் இகழ்கிறீர்கள்? இலங்கை அரசாங்கத்துக்கு கடைசி எச்சரிக்கை. இதை நிறுத்துங்கள். என்று சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் எச்சரித்துள்ளனர். 

எனினும் சைபர் தாக்குதலுக்கு இலக்கான மூன்று இணையத்தளங்களும் மீள இயங்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Thursday, March 7, 2013

சம்மாந்துறை சிறுவர் பூங்காவில் மர நடுகை


சம்மாந்துறை அமீரலி பொது நூலக வளாகத்திற்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவின் அபிவிருத்திப் பணிகள்  நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக பூங்கா வளாகத்தை அழகு படுத்தும் வண்ணம் மரக்கண்றுகள் நடப்பட்டன 
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தலைமை தாங்கியதோடு பல சமூக ஆர்வலர்களும் பங்கு கொண்டனர்.
சம்மாந்தறை பிரதேச சபைத் தவிசாளர் ஜனாப் ஏ.எம்எம்.நௌசாத் அவர்களும். மற்றும் சம்மாந்தறை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் கே.எல. ஸகி அகமட் அவர்களும் இன்னும் சமூக ஆர்வலர்களும் மரக்கண்றுகளை நட்டு வைத்தனர்.

 

Friday, February 22, 2013

வினாடிவினாப் போட்டியில் சம்மாந்துறை மகளிர் வித்தியாலய மாணவி இரண்டாம் நிலையைத் தட்டிக்கொண்டார்.

---------- Forwarded message ----------
From: Thaha Naleem Abdul Majeed <thahanaleem@gmail.com>
Date: Fri, 22 Feb 2013 21:46:27 +0530
Subject: வினாடிவினாப் போட்டியில் சம்மாந்துறை மகளிர் வித்தியாலய மாணவி
இரண்டாம் நிலையைத் தட்டிக்கொண்டார்.
To: Abdul Rasool Sajith Ali <arsajinet@gmail.com>,
kalasemnet@gmail.com, jaffnamuslim1990@yahoo.com,
news@addalaichenai.info, Mohamed Azoor <azooruwu@gmail.com>,
editor@kinniya.net, news@kinniya.net, info@eravurinfo.com,
sammanthurai news <sammanthurainews@gmail.com>, str web
<infostrweb@gmail.com>, maruthamunaionline@live.com,
puttalamonline@yahoo.com, இலங்கைநெற் செய்திகள் <ilankainet@gmail.com>,
Battinews batticaloa <info@battinews.com>, kalmunaihot@yahoo.com,
info@veeramunai.com, sathiyaraj@veeramunai.com, Thambiluvil
Thirukkovil <thambiluvil@gmail.com>, sayan@thambiluvil.info,
jesmymmoosa@yahoo.com, haniffajp@yahoo.com, Kattankudi Web Community
<kattankudi@yahoo.com>, vtsaha123@gmail.com

சகல இணையப்பதிப்பாளர்களுக்கு,

தயவு செய்து எமது பாடசாலையின் இந்தச் செய்தியை தங்களுடைய இணையத்தில்
பிரசுரிக்குமாறு பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்

ஏ.எம். தாஹா நழீம்


வினாடிவினாப் போட்டியில் சம்மாந்துறை மகளிர் வித்தியாலய மாணவி இரண்டாம்
நிலையைத் தட்டிக்கொண்டார்.



எதிர்பாராமல் மனிதனுடைய வாழ்வில் ஏற்படக்கூடிய பல சம்பவங்கள் முன்னைய
வரலாறுகளில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் கிழக்கு மாகாணத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு
நடைபெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது தான் அனர்த்த முகாமைத்துவத்தின்
உண்மைத்தன்மை மக்கள் மனதில் தெளிவை ஏற்படுத்தியது என்றால் அவை மிகையாகாது.

இந்த வகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் அவை தொடர்பான விழிப்புணர்வை
ஏற்படுத்த பல நிறுவனங்கள் பல்வேறு பிரயத்தனங்களை
ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு மாகாண மட்டத்திலான பாடசாலைகளுக்கிடையில் அனர்த்த
முகாமைத்துவ வினா விடை போட்டி பிரிவு 8-9ல் கமு/சது/ முஸ்லிம் மகளிர் வித்,
மாணவர் MMF. றஸான் இரண்டாம் நிலையைப் பெற்று இந்த வலயத்திற்கும் பாடசாலைக்கு
பெருமை தேடித்தந்துள்ளார். இந் நிகழ்வு 22.02.2013ஆந் திகதி காலை 9.00 மணிக்கு
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவி வெற்றிக்
கின்னத்தையும், சான்றிதலையும் இந் நிறுவனத்தின் அதிகாரியிடமிருந்து பெற்றுக்
கொள்ளும் காட்சியாகும்.



இந்தப்போட்டியில் இந்த மாணவி வெற்றிபெற இப்பாடசாலையின் அதிபர் ரீ.எம்.தௌபீக்
அவர்களும் அசிரியைகளான MI.முஜிபா, MY. ஜெமிலா ஆகியோர் வழிகாட்டியாகவும்,
ஆலோசகர்களாவும் செயற்பட்டார்கள் என்பதை சொல்லிக்கொள்வது இங்கு பொருத்தமாகும்.



2012 ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் GIZ நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அனர்த்த
முகாமைத்துவ வினாடி வினா 8-9 பிரிவுப் போட்டியில் இரண்டாம் நிலையை Miss. MMF .
றஸான் என்னும் கமு/சது/ முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி
தட்டிக்கொண்டதற்காக22.02.2013
ஆந் திகதயின்று மட்டக்களப்பு இந்து கல்லூரியில் அந் நிறுவனத்தின் அதிகாரிகளால்
வெற்றிக்கின்னம், சான்றிதழ் வழங்கும் போது பிடிக்கப்பட்ட படம் இதுவாகும்.



தகவல் ஏ.எம். தாஹாநழீம் - பிரதி அதிபர்



--
*firos123g@gmail.com
info@sammanthurai.tk*
*
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
*

Wednesday, February 6, 2013

தாய் நாட்டை விட சிறந்த நாடு வேறு எங்கும் இல்லை







தாய் நாட்டை விட சிறந்த நாடு வேறு எங்கும் இருக்க முடியாது. உங்கள் நாட்டை ஒருபோதும் மறக்க வேண்டாம். தாய்நாடே சிறந்ததென தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம்  நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இஸ்லாமிய கற்கை அரபு மொழி பீடத்திற்கான கட்டடம், பல்கலை மாணவர்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் ஆகியனவும் ஜனாதிபதியினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

322 மில்லியன் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. குவைத் நாட்டின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தின் திறப்பு விழாவில் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாஉல்லா, சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி;-  இந்த உலகில் களவாட முடியாதது அறிவு மாத்திரமே. இது பெரியதொரு செல்வம். பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பாகக் கற்று சர்வதேச ரீதியில் தொழில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

அவ்வாறு சர்வதேச ரீதியில் தொழில்புரியச் சென்றாலும் நம் தாய் நாட்டை மறக்கக்கூடாது. சாந்தி, சகவாழ்வு சமாதானம் இவற்றையே இஸ்லாமிய மதம் வலியுறுத்துகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இனவாதம், மதவாதம், தீவிரவாதம் இருக்கக்கூடாது.


நீங்களே நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நீங்களே இந்த நாட்டின் எதிர்கால புத்திஜீவிகள். இன, மதங்களுக்கு அப்பால் ஐக்கியத்தை இங்கு காண முடிகின்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இங்கு ஒற்றுமையாகக் கல்வி பயில்கின்றனர். இது ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாகும்.

கடந்த 5 வருடத்தில் அரசாங்கத்தின் மூலமும், குவைத்தின் கடன் உதவி மூலமும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். இன்று பொறியியல் பீடமும் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடனுதவியை வழங்கிய குவைத் அரசாங்கத்துக்கு இலங்கை அரசின் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள பொறியியல் பீடம் இஸ்லாமிய கல்வி, அரபு மொழி பீடம் என்பன இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய தேவைகளாகும். பல்கலைக்கழக மாணவர்கள் தோல்விகளை அல்ல வெற்றிகளைப் பெறுபவர்களாகவே இருக்க வேண்டும். வெற்றி பெறுவதற்காகவே அவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உயர் கல்வி பீடங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் கலை மற்றும் நுண்கலை பீடங்கள் அமைக்கப்பட்டு ஏனைய துறைகளைப் போல அத்துறைகளிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உபவேந்தர் மேற்கொள்ள வேண்டும். நான் 2005 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இங்கு விஜயம் செய்த போது இப்பகுதி பெரும் காடாகக் காட்சியளித்தது. சிறிய கட்டடமொன்றிலேயே பல்கலைக்கழகத்தைக் கண்டேன்.

இன்று இந்தப் பல்கலைக்கழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. எனது நண்பர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் கண்ட கனவு இந்த சர்வ கலாசாலை மூலம் நிறைவேறியுள்ளது. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்ற பொறியியலாளர்களாக உருவாக வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்  என  ஜனாதிபதி தெரிவித்தார்.

மேற்படி பல்கலைக்கழக வளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வரவின் நிமித்தம் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும் உபவேந்தர் நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார். 


news.lk

Tuesday, February 5, 2013

ரிசானாவின் சகோதரிக்கு வேலை வாய்ப்பு


சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் வீட்டுக்கு ஜனாதிபதியின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று விஜயம் மேற்கொண்டார்.

திருகோணமலை- மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள ரிசானாவின் வீட்டிற்கு  விஜயம் செய்தபோது ரிசானாவின் சகோதரிக்கு வேலை வாய்பொன்றை பெற்றுத் தருவதாக ஜனாதிபதியின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ஷ  உறுதியளித்தார்.

ரிசானாவின் குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களையும் வழங்கினார்.அரசினால்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைக்கும் பணிகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு ஷிரந்தி ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

சிரச்சேதம் செய்யப்பட்டு உயிரிழந்த சிரானாவின் பிறந்தநாள்  04 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது. 
.news.lk

க.பொ.த. விசேட பரீட்சைக்கு 1800 மாணவர்கள்


மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென நடத்தப்படவுள்ள விசேட க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு 1800 மாணவர்கள் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

2012 டிசம்பர் மாதம் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கென எதிர்வரும் 9,10,11 ம் திகதிகளில் விசேட க.பொ.த. பரீட்சையை நடத்தவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

news.lk

Sunday, February 3, 2013

சுதந்திர தின செய்தியில் ஜனாதிபதி

தேசத்தின் இறைமையை உறுதி செய்வதற்காக மிகப்பெரும் தியாகங்களைச் செய்த இலங்கையர்களான நாம் 65வது தேசிய சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகிறோம்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுளளதாவது:

சுதந்திரத்தை உண்மையாக அர்த்தப்படுத்தும் வகையில் நாடு அபிவிருத்திப் பாதையில் காலடியெடுத்து வைத்துள்ளது. மிகவும் கடினமான- சவால் நிறைந்த இப்பணியை நிறைவேற்றுவதானது தேசத்திற்கு நீதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவரும்.

நீங்களும் உங்களது பிள்ளைகளும் எதிர்காலம் பற்றிய அச்சத்துடனும் சந்தேகத்துடனும் நோக்கத் தேவையில்லாத ஒரு காலம் தற்போது உதயமாகியுள்ளது.

நாட்டுக்கு எதிராக அணிவகுத்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடிப்பதற்கு நாம் உறுதியான அர்ப்பணத்துடன் செயற்பட்டோம்.

தலைமைத்துவம் கடினமான சவால் நிறைந்த சூழ்நிலைக்கு முகங்கொடுக்க நேர்ந்த போதும் நாம் நாட்டை காட்டிக்கொடுக்காத இலட்சியத்தைக் கொண்டவர்கள்.

எமது மக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கும் பாரிய ஒத்துழைப்பிலிருந்து நாம் மிகப்பெரும் பலத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.

சமூகங்களுக்கிடையிலான ஐக்கியமும் சமய நல்லிணக்கமும் நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கிய அம்சங்களாகும். எமக்கு மத்தியிலான பிரிவினைகள் எமது சுதந்திரத்தை எமக்கு மறுக்கும் பல்வேறு சக்திகளை பலப்படுத்திவிடும்.

எல்லா சமூகங்களும் ஐக்கியமாக எழும்போது நாட்டுக்கு எதிரான சக்திகள் பல்வீனமடைந்து சுதந்திரம் மேலும் பலப்படும். தேசிய ஐக்கியத்திற்கான மிகுந்த உறுதியுடனும் தெளிவான அர்ப்பணத்துடனும் நாம் 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.

நாட்டின் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு உயர்ந்த தியாகங்களைச் செய்த எல்லா நாட்டுப்பற்றுடையவர்களுக்கும் நாம் எமது மரியாதையைச் செலுத்துகிறோம்
news.lk

இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி

எமது தாயகம் ஸ்ரீ லங்கா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளை தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாழ்த்துச் செய்தியை

வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்;சியடைகிறது.

கடந்த 65 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்காக எமது நாடு

பல்வேறுபட்ட சவால்களை காலத்திற்கு காலம் சந்தித்து வந்துள்ளது.

மிகக்கொடூரமான யுத்தமொன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அனைத்து இலங்கையரும் சமாதானத்தோடும்

சகவாழ்வோடும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று திடசங்கட்பம் பூண்டுள்ள

நிலையில் இவ்வருட சுதந்திர தினத்தை நாம் நினைவுபடுத்துகின்றோம்.

பௌத்தர்கள்ää முஸ்லிம்கள் ஹிந்துக்கள்ää கிறிஸ்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு

செழிப்புடனும்ää அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும்
பிரார்த்தனைகளுமாகும்.

ஒரு

நாட்டின்

நாட்டுப்பற்றிலுமே தங்கியுள்ளது என்பதே எமது நம்பிக்கையாகும். அந்த வகையில் நாட்டுப்பற்றையும்
சமூகää சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையையும்ää ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்க்கமான ஒரு

சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் இருக்கின்றோம்.

எனவே இந்நாட்டில் சௌஜன்யம்  ஐக்கியம் சகிப்புத் தன்மை என்பவற்றை கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக்

கொடுப்புää நம்பிக்கை என்பன மூலம் ஒரு தாய் மக்களென சகலரும் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

நல்லாசி கூறுகிறது.

அபிவிருத்தியும்
முன்னேற்றமும்

அந்நாட்டு

மக்களின்

ஒற்றுமையிலும்
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்

தேசிய பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

சம்மாந்துறை முஸ்லிம் மகளிரில் தேசிய மீலாத் விழா-2013





சம்மாந்துறை முஸ்லிம் மகளிரில் தேசிய மீலாத் விழா-2013
கல்வி அமைச்சின் அறிவித்தலின் பிரகாரம் சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் தேசிய மீலாத் விழா 2013.01.28ஆந் திகதியன்று சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்புப் பேச்சாளாராக  MYA. ஜலில் மௌலவி அவர்கள் கலந்து சொற்பொலிவாற்றியதுடன் மாணவ, மாணவிகளின் இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.

இந் நிகழ்வை பாடசாலையின் அதிபர் TM.தௌபீக் அவர்களின் தலைமை தாங்க, மற்றும் ஆசிரியர்களான SL.மன்சூர், M. பைஸானா, I .ஹசீனா ஜென்னத் ஆசியோர் நெறிப்படுத்தினார்கள். 



--

Sunday, January 27, 2013

அமைச்சரவையில் இன்று மாற்றம்! பிரதமர் பதவி மாறாது!


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மாற்றம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க நேற்று தெரிவித்தார்.

இதற்கமைய- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறும் நிகழ்வில் புதிய அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
 
 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைத்தது. அந்த அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றமே இன்று இடம்பெறுகின்றது என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தகவல் ஊடகத் துறை- மின்சக்தி- எரிசக்தி- விஞ்ஞான தொழில் நுட்பவியல்- விளையாட்டு உள்ளிட்ட சில அமைச்சுக ளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட விருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.

என்றாலும் பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என்றும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சர் பதவியோ- பிரதியமைச்சர் பதவியோ வழங்கப்பட மாட்டாது எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.


முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகள் வேண்டாம்: ஜனாதிபதி கோரிக்கை

மதக் குரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வன்முறைகளை தூண்டும் வண்ணம் செயற்பட வேண்டாம் என பொதுபலா சேனா அமைப்பிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ கோரிக்கை விடுத்துள்ளார். 

சிறுபான்மை முஸ்லிம் மதத்தவர்களை இலக்கு வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். 

நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த அமைப்பிடம் ஜனாதிபதி கோரியுள்ளார். 

பௌத்த மதத்தை வலுப்படுத்துவதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அது ஏனைய மதங்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது என அவா குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, தமது பெயரைப் பயன்படுத்தி சில அமைப்புக்கள் மதக் குரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 


adaderana.lk

சம்மாந்துறை IFSDOஅமைப்பின் கல்வி அபிவிருத்தி திட்டம்



சம்மாந்துறை ஐடியல் நண்பர்கள் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் 2013ம் ஆண்டிண் செயற்பாடுகளில்
ஒன்றான தரம் 05ல் கல்வி பயிலும் கல்வியில் ஆர்வமுள்ளää வசதிகுறைந்த மாணவர்களுக்கான பாடசாலை
உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சென்னல் கிராமம் பிரதேசத்தில் அமைந்துள்ள அஸ் ஸமா
வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கும்ää சம்மாந்துறை மஜீட்புரம் வித்தியாலயத்தில் கல்விகற்கும்
மாணவர்களுக்கும் IFSDO அமைப்பின் தலைவர்; M.S.M. பர்ஹான் அவர்களின் தலமையில் கற்றல் உபகரணங்கள்
 கடந்த 24 மற்றும் 26ம் திகதிகளில் வழங்கப்பட்டது.

Sunday, January 13, 2013

சம்மாந்துறை அல் ஹிக்மா பகல் பராமரிப்பு நிலையத்தின் 2012ம் ஆண்டு இறுதிக் கலைநிகழ்ச்சிகள்





21 ம் வருட பூர்த்தியினை முன்னிட்டு சம்மாந்துறை அல் ஹிக்மா பகல் பராமரிப்பு

நிலையத்தினால்

2012.12.26ம் திகதியில் அப்துல் மஜீத் மண்டபத்தில் மிகவும் விமர்சையாக
நிகழ்வுற்றது. இவ்முன்பள்ளி 120 மாணவர்களினாலும் இவ்கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட
பெறும் திரளான மக்கள் கூட்டத்தினால் பிரதம அதீதி கௌரவ மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.எம்.
மன்சூர்இ விசேட அதீதி கௌரவ நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் கௌரவ பொத்துவில்
பிரதேச சபை மு. தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக் மற்றும் கௌரவ அதீதிகள் அமோக வரவேப்புடன்
வரவேற்று;இ இவ்கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகல மாணவர்களுக்கும் பரிசில்களும்
சான்றிதல்களும் அதீதிகளினால் வழங்கப்பட்டது.

Saturday, January 12, 2013

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு கட்டனம் அறவிடுவது ஏன் ?


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றது. மக்களின் தேவைக்கேற்ப சமயம் சார்ந்த மற்றும் பொது நலன் கொண்ட விடயங்களில் ஜம்இய்யா பாரிய பணி ஆற்றிவருகின்றது. அது ஒரு போதும் முதலீட்டும் நோக்கம் கொண்டு செயற்படுவதில்லை. தனது பன்முகப்படுத்தப்பட்ட பணிகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையும் ஒன்றாகும். இச்சேவையும் ஜம்இய்யாவின் ஏனைய சேவைகளைப் போன்று சேவைநலன் கொண்டதே அன்றி முதலீட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதையும் தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கின்றோம்.


சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்  சில நிறுவனங்களின் வேண்டுகோள்களைக் கவனத்திற்கொண்டே 2000ஆம் ஆண்டு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில்  அறுக்கப்பட்ட கோழிகளை சந்தைப்படுத்தும் இரண்டு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் அவசியப்பட்டபோது அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை அணுகினர். அவர்களின் வேண்டுகோளை நன்நோக்கம் கொண்டு பார்த்த ஜம்இய்யா  ஹலால் சான்றிதழ் கொடுத்ததோடு  அறுவை மேற்பார்வை செய்பவர்களை இரண்டு நிறுவனத்திலும் நியமித்தது. ஏனெனில் கோழிகளை அறுத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அவர்களால் அறுக்கப்படும் ஒவ்வொரு கோழியினதும் ஹலால் தன்மையை உறுதி செய்த பிறகே சான்றிதழ் வழங்க முடியும். அவ்வாறு நியமிக்கப்பட்டவருக்கு குறித்த நிறுவனங்கள் தந்துவந்த பணத்தையே ஊதியமாக கொடுத்து வந்தது.


ஹலால் சான்றிதழ் இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரம் ஆரம்பத்தில்  இருந்து வந்தது. உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களால்  ஹலால் சான்றிதழின் நுகர்வுச் சந்தையில் ஏற்பட்ட அதிகரிப்பும்  வெளிநாட்டு ஏற்றுமதியின்போது ஏற்பட்ட ஹலால் சான்றிதழின் அவசியமும் பல்வேறு உற்பத்தியாளர்களையும் ஹலால் சான்றிதழ் பெற தூண்டியது. அவ்வாறு படிப்படியாக சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் இதுவரை 204 ஆகும்.


ஹலால் சான்றிதழ் பெற்ற அனைத்து நிறுவனங்களும்  எவருடைய வற்புறுத்தலுமின்றி அவர்களது சுய விருப்பின் பேரில் தாமாகவே விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றவையாகும். நாட்டில் அதிகரித்துவரும் ஹலால் சான்றிதழின் அவசியத்தைக் கவனித்தே ஜம்இய்யா ஹலால் பிரிவு என்ற தனியானதொரு பிரிவை  உண்டாக்கியது.  அதற்கென தனியாதொரு இடத்தை வாடகைக்குப் பெற்று காரியாலய வசதிகளைச் செய்துகாரியாலயப் பணியாளர்கள்ஆய்வாளர்கள்,  உணவுப் பகுப்பாய்வாளர்கள்,கண்காணிப்பாளர்கள்மேற்பார்வையாளர்கள் என ஹலால் சான்றிதழ் வழங்குவதோடு சம்பந்தப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முழு நேரப்பணியாளர்களை வேலைக்கமர்த்தி   இச்சேவையை மிகச் சிறப்பாக நாட்டுக்கு வழங்கி வருகின்றது.


ஹலால் சான்றிதழ்  வழங்கும் சேவையை மேற்கொள்வது சாதாரண விடயமல்ல. பல்வேறு பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டியிருப்பதால் பல்வேறு செலவினங்கள் உள்ளன. உணவுப் பகுப்பாய்வு  நிபுணர்கள்ஹலால் கண்காணிப்பாளர்கள்ஹலால் மேற்பார்வையாளர்கள்கணக்காளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான ஊதியங்கள்,கொடுப்பனவுகள்மற்றும் போக்குவரத்துநிர்வாகம்தொடர்பாடல்நீர்மின்சாரம்காரியலயம் இயங்கும் கட்டிட வாடகைசான்றிதழ் பெற்றுள்ள தொழிற்சாலைகளைக் கண்காணித்தல் மற்றும்  ஆய்வு கூடச் செலவுகள்போன்றவற்றுக்கு மாதமொன்றுக்கு ரூபாய் பதின் மூன்று இலட்சம் தேவைப்படுகின்றது.


மேற்குறித்த செலவுகள் தவிர்ந்த வேறு செலவுகளும் உள்ளன. சர்வதேச ஹலால் மாநாடுகளில் கலந்துகொள்ளல்உலமாக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகளையும் பொதுமக்களுக்கான விழிப்புக் கருத்தரங்குகளையும் நடாத்துதல்ஹலால் சான்றிதழ் வழங்குவதில் சர்வதே ரீதியில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களோடு புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடல்  போன்றவிடயங்களுக்காக அவ்வப்போது தேவைப்படும் செலவுகள் நலன்விரிம்பிகளிடமிருந்தே பெறப்பட்டுவருகின்றன.


மேலே விவரிக்கப்பட்டது போன்ற ஏராளமான செலவுகள் ஹலால் பிரிவுக்கு இருந்த போதிலும் முற்றிலும் இலாப நோக்கமின்றி இயங்கும் ஒரு அமைப்பாகிய எமது அமைப்பு நுகர்வோருக்கோ,  உற்பத்தியாளர்களுக்கோ ஒரு சுமையாக ஆகாத விதத்தில் பின்வருமாறு தமது கட்டணக் கட்டமைப்பை வடிவமைத்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை
ஒரு உற்பத்திப் பொருளுக்கான மாதாந்தக் கட்டணம்

சிறு நிறுவனம்
நடுத்தர நிறுவனம்
பெரிய,பன்னாட்டு நிறுவனம்
1 to 5
500-700
1000-1250
1500-2000
6 to 10
400-600
800-1000
1250-1500
11 to 20
250-400
600-800
800-1000
21 to 30
-
400-600
600-800
31 to 50
-
200-300
350-500
51 to 100
-
100-200
200-300
>100
-
-
20,000-25,000**


**ஹலால் சான்றிதழ் பெறும் உற்பத்திப் பொருட்கள் நுறாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருந்தால் ரூபா இருபதாயிரம் முதல் இருபத்தையாயிரம் வரை மாத்திரமே அறவிடப்படும்.







சிறு நிறுவனம்
பொருட்களின் எண்ணிக்கை
ஒரு பொருளுக்கான மாதாந்தக் கட்டணம்
மாதாந்த  முழுக் கட்டணம்
வருடத்திற்கான கட்டணம்
1
ABC நிறுவனம்
1
500
500.00
6,000.00
2
ABC தயிர் தயாரிப்பு நிறுவனம்;
4
500
2,000.00
24,000.00
3
ABC கேக் தயாரிப்பு நிறுவனம்
12
250
3,000.00
36,000.00




நடுத்தர நிறுவனம்


4
ABC ஜஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம்
5
1000
5,000.00
60,000.00
5
ABC பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம்
25
400
10,000.00
120,000.00




பெரிய நிறுவனம்   


6
ABC சொகலட் தயாரிப்பு நிறுவனம்
75
200
15,000.00
180,000.00
7
ABC பன்னாட்டு நிறுவனம்
101
-
25,000.00
300,000.00


ஒரு கோழிப்பண்ணை மூலம் இருபதாயிரம் முதல் நாற்பதாயிரத்துக்குட்பட்ட தொகை மாதாந்தம் பெறப்படுகின்றது. உற்பத்தியாளர் தினமும் பதினைந்தாயிரம் முதல் இருபத்தையாயிரம் வரையிலான கோழிகளை  அறுத்து சந்தைப்படுத்துகின்றனர்.


அவ்வாறே மேற்கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கவனிக்கும்போது உணவு உற்பத்தியாளர்களிடமிருந்து எழுநூறு ரூபாய் முதல் இருபத்தையாயிரம் ரூபாய் வரையிலான கட்டணங்கள் மாத்திரமே மாதாந்தக் கட்டணமாக பெறப்படுகின்றன. ஜம்இய்யாவினால் ஹலால் சான்றிதழுக்காக கோழிப் பண்ணைகளிடமிருந்து மாதாந்தம் அறவிடப்படும் தொகையையும் அப்பண்ணைகளால் மாதாந்தம் சந்தைப்படுத்தப்படும் கோழிகளின் எண்ணிக்கையையும் கவனிக்கும்போது ஒரு கோழியின் ஹலால் சான்றிதழுக்காக ஆறு சதம் மாத்திரமே பெறப்படுகின்றது.


ஜம்இய்யாவின் ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையைத் தொடர அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் ஜம்இய்யா மாதாந்தம் அறிவிடும் முழுத் தொகை
பதினைந்து இலட்சம் ரூபாய் மாத்திரமேயாகும்.

நிறுவனங்கள் ஹலால் சான்றிதழின் பயனாக உள்ளுர்வெளியூர் சந்தையிலும் சுற்றுலா மூலமும் ஆதாயம் பெறுகின்றன. இந்நிலையில் சான்றிதழுக்கு ஒரு பொருளின் மூலம் பெறப்படுவது சதங்களை விட குறைவானதே மேலும் ஹலால் சான்றிதழுக்காக நிறுவனங்கள் வழங்கும் சிறு தொகை அவர்களின் வியாபாரத்தை விரித்தியடைய வைத்துள்ளதே அன்றி பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்யவில்லை என்பது மிகத்தெளிவானதொரு விடயமாகும். எனவே முஸ்லிம்களோ முஸ்லிமல்லாதவர்களோ ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களுக்கு ஏனைய பொருட்களைவிட அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்ற கூற்று மக்களை பிழையாக வழிநடாத்தும் முயற்சியாகும்.


இதுவரை ஜம்இய்யாவின் ஹலால் அத்தாட்சிப்படுத்தற் பிரிவினால் 204 நிறுவனங்களினூடாக சுமார்4500 பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நிர்வனங்களிடமிருந்தும் மாதாந்தம் மொத்தமாக பெறப்படும் தொகை சராசரியாக பதினைந்து இலட்சம் ரூபாயாகும். இதனுடைய அனைத்து கணக்கு முறைகளும் வருடாந்த கணக்காய்வின் மூலம் உறுதிசெய்யப்படடிருப்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இவ்வாறிருக்க ஜம்இய்யாவின் ஹலால் சான்றிதழ் வழங்கும் பிரிவு மாதமொன்றுக்கு ஒரு நிறுவனத்திடமிருந்து 175000 ரூபாய் அறவிடுவதாகவும் இதனடிப்படையில் வருடத்துக்கு 700கோடி ரூபாய் வருமானமீட்டி அல் காயிதாஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு அனுப்புவதாகவும் ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மூன்று தசாப்தகால கொடிய யுத்தத்தின் பின்னர் நிம்மதிப் பெருமூச்சு கண்டுள்ள நம் நாட்டில் இதன் மூலம் இனமோதல்கள் தூண்டப்படுவதை சிந்திப்போர்
உணர்வர். இதுபற்றி பொறுப்பு வாய்ந்தோர் அவதானமாக இருப்பதே நாட்டின் அமைதிக்கு வழிகோலும்.

ஹலால் சான்றிதழ் நிதிப் பாவனை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள் சம்பந்தமாக எமது அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து உண்மை நிலையை  கண்டறியுமாறு தேசியப் புலனாய்வுப் பிரிவுகுற்றப் புலனாய்வுப் பிரிவுபாதுகாப்புத் தரப்பு ஆகியவற்றுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பிரிவு அழைப்புவிடுக்கின்றது.
மேலும் ஹலால் சான்றிதழ் நிதிப் பாவனை தொடர்பிலான உண்மைகைளைக் கட்டறிந்து  நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் தப்பெண்ணெங்கள் களையப்படல் வேண்டும். இதற்கு அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஆவண செய்தல் வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  ஹலால் பிரிவு வேண்டிக்கொள்கின்றது.

    
எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் விடயங்களை பொதுமக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றது.


·         ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம் வருடமொன்றுக்கு 700 கோடி ரூபாய் அறவிடுவதாகவும் அப்பணம் பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாகவும் சொல்லப்படும் குற்றச்  சாட்டுக்களை நிரூபிக்குமாறு வேண்டுகிறோம்.

·         ஹலால் மற்றும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விடயங்களைப்பற்றி தெளிவுகளைப்பெற எம்மைத் தொடர்ப்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

·         இது இரகசியமானதொன்றல்ல எனக் கூறிக்கொள்வதோடு எவரும் முறையாக எமது காரியாலயத்திற்கு வந்து இது சம்பந்தமான தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

·         இத்தகைய பொய்ப்பிரச்சாரங்களின் மூலம் மக்களை தூண்டிவிட்டு குழப்பங்களை விளைவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.