Friday, August 20, 2010

தேசிய பாடசலையின் வளர்ச்சி தொடர்பான செய்தி

eVillage திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் பயன் பாட்டுக்கென 5கணனிகள், ஒரு மடிகணனி(Laptop) ,ஒரு Multimedia projector என்பன உற்பட WI-FI Zone நிறுவப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊளியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இனையத்தை இலகுவாகவும் இலவசமாகவும் பயன் படுத்துகின்றனர்




பாடசாலை கல்வி, கலை மற்றும் பிறதுறைகளில் ஒரு புதுயுகமாக இவ்வாண்டில் அதன் செயற்பாடுகளை விஷ்ததரித்துள்ளது.



மலர்ந்திருக்கும் இவ்வாண்டு (2010) பாடசாலையின் வைரவிழா ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



கல்வி அமைச்சின் இடைநிலைக் கல்வி நவீன மயப்படுத்தல் திட்டத்தின் கீழ் E-Village நிகழ்ச்சி ஒன்றிற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள 4 பாடசாலைகளில் எமது பாடசாலையும் முதல் இடத்தில் தெரிவாகியுள்ளமை குறித்து அதிபர் ஆசி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் எமது கல்லூரியில் எதிர்வரும் 15ம் திகதி E-Village இணைப்பாளர் நந்தசிறி வன்னிநாயக்க என்பவரால் மேற்கொள்ளப்படவுள்ளது.



கடந்த ஆண்டின் க.பொ.த உயர்தரத்திலிரிந்து பாடசாலைக்கு அமோக வெற்றி. குறிப்பாக மாணவன் MMM.றம்சான் மாவட்டத்தில் முதல் தரத்தில் பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளதோடு மேலும் ஐவர் பொறியியல் துறைக்கும் ஐவர் மருத்துவத் துறைக்கும் கலை, வர்த்தகத்திற்கும் அனேக மாணவர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அண்மையில் The Creative Box நடாத்தி முடித்த தேசிய மட்டத்திலான தனியாள் சஞ்சிகை போட்டி ஒன்றில் பங்குபற்றி முதலிடத்தை பெற்றமைக்காக தரம் 09ஐச் சேர்ந்த மாணவன் MFM. சம்லிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளமை குறித்து அதிபர், ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.