Tuesday, August 31, 2010

விளையாட்டு வளம்

எமது ஊரான சம்மாந்துறையில் உள்ள விளையாட்டு பல் மாடிக் கட்டிடத் தொகுதியை எமது இளைஞர்கள் பயன்படுத்தும் அளவு போதாது என நிருவாகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே இளைஞர்களே தாங்கள் படிப்புடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி இருக்கும் வளத்தைக் கொண்டு உச்ச பயனைப் பெறுவோமாக.





         

மண் ஏற்றும் பார ஊர்தியால் ஏற்பட்ட வினை

சம்மாந்துறை பெளசி மாவத்தையில் இருந்து செந்நெல் கிராமத்தை இணைக்கும் பாதையானது பார ஊர்திகளின் கூடுதலான போக்குவரத்துக் காரணமாக மக்கள் பாவனைக்கு இடரான பாதையாக மாறியுள்ளது.இது கரடு முரடான கற்பாறையாக உருமாறியுள்ளதைப் படத்தில் காணலாம்.இதன் மூலம் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.எனவே உரிய அதிகாரிகள் கருத்திற்க் கொண்டு பாதையை திருத்தி அமைக்குமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் புதிய நிலைப் புகைப்படங்கள் இதோ


சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் பழைய நிலைப் புகைப்படங்கள் இதோ





சம்மாந்துறை செட்டைவட்டை வீதியில் மக்கள் திடீர் பதற்றமுற்றுள்ளனர்

இன்று சம்மாந்துறை முகைதீன் மாவத்தையில் மக்கள் திடீர் பதற்றமுற்றுள்ளனர்.ஏனெனில் அங்கு ஒரு சிறுமியினால் இனங்காட்டபட்டுள்ள ஓர் இறந்த பெட்டியில் காணப்பட்ட கைக்குண்டே காரணமாகும்.இவ் இறந்த பெட்டி ஒன்றினுள் கைகுண்டு ஒன்று காணப்படுகிறது இதை புகைப்படதில் காணலாம்.இதை ஒரு சிறுமியே இனங்காட்டியுள்ளார்.இது குறித்து அச் சிறுமி கூறுகையில்-
தான் விளையாடுவதற்காக சுமார் 11.30 அளவில் பக்கது வளவிற்குச் சென்றதாகவும்
அங்கு உமி குமித்துக் காணப்பட்டதாகவும் அதற்கு பின்னால் ஓர் இறந்த பெட்டி ஒன்றினுள் எதோ இறந்த பொருள் ஒன்ரு காணப்பட்டதாக்வும் அதை அம்மா அக்கம் பக்கதில் உள்ளவர்களிடம் கூறியதாகவும் அச்சிறுமி கருத்து தெரிவித்தார்.

பின் பொலிஸார் சம்பவ இடதிற்கு விரைந்து குண்டு செயலிழக்கும் பிரிவினரால் சுமார் 3.45 அளவில் கைக்குண்டானது  செயழிலக்கப்பட்டது.   
                                                                      

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.