Wednesday, September 8, 2010

நபி வழியில் நம் பெருநாள் தொழுகை

அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!அஸ்ஸலாமு அலைக்கும்.அபுஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.அவர்களது காரியங்களில் முதற் காரியமாக தொழுகையை துவக்குவார்கள்.(புஹாரி 956,முஸ்லிம் 1612)

இரு பெருநாட்களிலும் மாதவிடாய் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும்(தொழும் திடலுக்கு)அனுப்புமாறும் அப் பெண்கள் வீட்டில் இருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்கு சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும் தொழுமிடத்தை விட்டும் மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கி இருக்குமாறும் நாங்கள் கட்டளையிட்டோம் என நபி (ஸல்) கூறியதாக உம்மு அத்தியா(ரழி)அறிவிக்கின்றார்கள்.(புஹாரி351,முஸ்லிம்1612).

இந்த நபி வழிக்கு மாற்றமாக காலாகாலமாக பெருநாள் தொழுகை தொழுவிக்கப்படுவதாலும்,பெண்கள் பெருநாள் தொழுகைகளில் புறக்கணிக்கப்படுவதாலும்,இம் முறை நோன்புப் பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்,அல்ஹம்துலில்லாஹ்.

இடம் :- அல்மர்ஜான் மகளிர் கல்லூரி மைதானம்
காலம்:-பெருநாள் தினம்(அகில இலங்கை உலமா சபை பிறைக்குழுவால் அறிவிக்கப்படும் தினம்)
நேரம்:-காலை 06.20
ஏற்பாடு:- சம்மாந்துறை தவ்ஹீத் ஜமாஅத்
இம் முயற்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்-
0773520876,0775527326








இலங்கை நாடாளுமன்றத்தில், 18 வது அரசியலமைப்பு திருத்த விவாதம் ஆரம்பமாகியது

சிறிலங்கா நாடாளுமன்றத்தில்,  18 வது அரசியலமைப்பு திருத்த விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்புத் தெரிவித்து வரும் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கட்சியி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

இந்தத் திருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மக்கள் அபிப்பிராயம் கோரி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டு வரும் நிலையில், சிறிலங்கா உச்ச நீதிமன்றம், மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என்றிருக்கிறது.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை பலம் பெற்று, புதிய அரசு அமைந்த போதும், ஆளும் கட்சிக்கு 144 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற, 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.
இந்நிலையில் அன்மையில் அரசுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ள,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர்கள் 8 பேருடன், ஐதேகட்சி  உறுப்பினர்கள் 6 பேர், அரசுடன் இணைந்துள்ள  ஜனநாயகக் கட்சியின் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய முன்னணியின் திகாம்பரம்,   அம்பாறை மாவட்ட ததேகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பியசேன ஆகியோர்,  அரசியலமைப்புத் திருத்ததிற்கு ஆதரவாக  வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.