Thursday, September 9, 2010

சம்மாந்துறையில் முதற் தடவையாக திடலில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம் முறை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் பெருநாள் தொழுகையானது வெகு சிறப்பான முறையில் திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது.இதில் பெருமளவான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.இது தவ்ஹீத் ஜமாஅத் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் வருகின்ற ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையானது திடலிலேயே தொழுவிக்கப் படும் என சம்மாந்துறை உலமா சபை உட்பட அனைத்து சபைகளும் முடிவெடுத்துள்ளது.மேலும் ஒரு தடவை மாத்திரமே பெருநாள் தொழுகை தொழுவிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
                                        

பசித்திருந்த இன்பப் பெருநாள்

*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!

*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.

*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!

*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

சம்மாந்துறையில் பெருநாள் கடைகள்

நாளை பெருநாள் தினத்தை முன்னிட்டு ஹிஜ்ரா வீதியில் தற்காலிக கடைகளின் வியாபாரமானது களை கட்டியுள்ளது.இதற்கான தற்போதைய புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.


                                                                      

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு

ஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு இன்று வியாழக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறுகிறது.
நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானி க்கும் வகையில் இன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம் களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது.
அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்க ளுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழு ம்பு பெரியபள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொள்கின்றார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.