Saturday, September 11, 2010

நோன்புப் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சிகள்

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை அஜ்மிரா ட்ரவல்ஸ் இன் ஏற்பாட்டில் மாபெரும் மரதன் ஓட்டமானது இன்று சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இடம்பெற்றது.இதில் அதிக எண்ணிக்கையான விளையாட்டு வீரர்கள் பங்குபற்றினர்.இது சுமார் 22 கிலோமீற்றர் கொண்ட அரை மரதன் போட்டியாகும்.இப் போட்டிக்கு பிரதம அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் மன்சூர் அவர்களும் சவூதி அராபிய உயர் அதிகாரி மாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது.இதற்கு அனுசரனை அஜ்மிரா ட்ரவ்ல்ஸ் இனால் வழங்கப்பட்டது.இம் மரதன் ஓட்டப் போட்டியில் வீரர்கள் பெற்ற இடங்கள் வருமாறு-
1ம் இடம் - M.RASKAN
2ம் இடம் - A.M.MOHAMED FARIS
3ம் இடம் - S.JEEVAN KUMAR
4ம் இடம் - M.L.SAFRAN
5ம் இடம் - K.L.ARAFATH
6ம் இடம் - A.J.SAJITH 

                                            





















































சம்மாந்துறையில் மழலைக்கும் கணணி அறிவா?

FAROOK MOHAMED MISBAH
ஆம் எமது சம்மாந்துறையில் மழலைக்கு கணணி அறிவு என்பது சாத்தியமான ஒரு விடயமாகக் உருமாறியுள்ளது.இதற்கு உதாரணமாக சம்மாந்துறை 413/ ,ஸதக்கர் லேன் இல் வசிக்கும் பாறுக் முஹம்மட் மிஸ்பாஹ் எனும் மழலையை உதாரணமாகக் கொள்ளலாம் இச் சிறுவன் மூன்று வயது கொண்டவனாக இருந்த போதிலும் கணணியை தானாகவே இயக்கி கேம் விளையாடும் வல்லமை கொண்டவனாகக் காணப்படுகிறான்.இச் சிறுவனுக்கு பெசும் பேச்சுக் கூட இன்னும் திருந்தாத நிலையில் கூட கணணியில் பாண்டித்தியம் பெற்றுள்ளான். இதை தொழிநுட்பத்தின் வளர்ச்சி என்பதா?பரம்பரையலகுகளின் ஆட்சியான இயல்பு வெளிக்காட்டல் என்பதா?எவ்வாறாயினும் இது நல்ல முன்னேற்றகரமாகவே கொள்ளலாம்.இவ்வாறான இளம் பிஞ்சு ஒன்று எமது ஊரில் காணப்படுவது எமக்குப் பெருமிதமே.இம் மழலையின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான காட்சியின் இணைக்கப்பட்டுள்ளது.

கீழே காட்சிப் படத்தினுடைய லிங் இணைக்கப்பட்டுள்ளது
http://www.youtube.com/v/vqRCCzaDKRA?hl=en&fs=1

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.