Wednesday, September 15, 2010
சுற்றாடலை சுத்தமாகப் பேணுவோம்
எமது ஊரின் அனேகமான வீதிகளானது மிகவும் அழகான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டுக் காணப்பட்ட போதும் எமது மக்கள் அழகாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அற்றவர்களாக தான் தோன்றித்தனமாக குப்பைகளை வீதியோரங்களில் போட்டு சூழலை மாசடையச் செய்கின்றனர்.இது குறித்து எமது செய்திப் பிரிவானது எமது பிரதேச சபைத் தவிசாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.இவ்வாறு செய்வோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மேலும் இவர்கள் இனங்காட்டப்பட்டு தகுந்த பாடம் புகட்டப்பட வேண்டும் எனவும் எமது செய்திப் பிரிவானது சம்மந்த்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றது.
24 மணி நேர எரிபொருள் நிரப்பு நிலையம்
தற்பொழுது சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிலையமானது தமது சேவையை 24 மணித்தியாலய சேவையாக விஸ்தரித்துள்ளது.இது ஒரு சிறந்த சேவை என மக்கள் கூறுகின்றனர்.இது வெளி ஊர்களில் இருந்து வரும் மக்களுக்கு சிறந்த ஓர் சேவையாக மேற்க் கொள்ளப்படுகிறது.மேலும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் எதிர் காலத்தில் பல்வேறு சேவைகள் மேற்க்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.