Monday, September 27, 2010

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அலசல்

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம்
இப் பாடசாலையில் சுமார் 40 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.இதில் அதிக புள்ளியாக 183 புள்ளிகளைப் பெற்று மாகண நிலையாக 3 ஐ அச்சி முஹமட் சுஹைப் அத்னான் என்கின்ற மாணவன் பெற்றுள்ளார்.மேலும் இப் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சை வகுப்பு ஆசிரியர்களான MRS.RBM.MANSOOR, MRS.MM.TAHIR, MRS.AU.RIMLAN, ஆகிய ஆசிரியர்களும்,பாடசாலை அதிபர் MR.TM.THOWFEEK அவர்களும் உதவி அதிபர் MR.M.MUSTHAFFA LEBBE அவர்களும் இணைந்த புகைப்படமானது இங்கே இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக செய்திகள் வெகு விரைவில் வெளிவரும்.மேலும் ஒவ்வொரு பாடசாலையிலும் சித்தியெய்திய மாணவர்கள் தொடர்பான செய்திகள் வெளிவரும்.

சட்டவிரோதமான ஆயுதங்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் l

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று தெரிவிக்க படுகின்றது குறித்த திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப் பத்திரமின்றி சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும் இக்குற்றத்தைப் புரியும் ஒருவர் 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் எனவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.