Friday, October 22, 2010

நட்புறவுக்கான மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டி




சம்மாந்துறை தேசிய பாடாசாலை மைதானத்தில் சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்திற்கும்,காரைதீவு விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டியானது 22.10.2010 ஆகிய இன்று பி.ப.4.00 மணிக்கு ஆரம்பமாகியது.மிகவும் உற்சாகமான எதிர்பார்ப்புகள் பல ரசிகர்களின் முகத்தில் முகபாவனைக் காட்டும் வகையில் இறுதிவரைப் போட்டியானது விறு விறுப்பான முறையில் அரங்கேரியது.இதில் ஏசியன் அணியானது 2 கோல்களையும் காரைதீவு விளையாட்டுக் கழத்தினர் ஒரு கோலினையும் பெற்று சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி வாகை சூடினர்.

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு திடீர் விஜயம்.


சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் M.I.M.மன்சூர் அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு காணப்படுகின்ற குறைகளைக் கேட்டு அறிந்தார்.மேலும் அங்கு சில குறைகளுக்கான தீர்வும் அவ்விடத்திலேயே எட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.