Thursday, October 28, 2010

சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய விழாக் கொண்டாட்டம் சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தில்


தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய விழாக் கொண்டாடும் தினமாக 2010ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறைகளைச் செய்து கொள்ளும் வகையில் மாணவர்களிடமிருந்தும்,ஆசிரியர்களி டமிருந்தும் நூல்களைப் பெற்றுக் கொள்வதையும் மாணவர்களுக்கான நூல்களை சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஜனாப் எ.எ.ஜப்பார்,நூலகர் ஜனாப் எ.எல்.எம்.ஜாபிர் படங்களில் காணலாம்.

                                                                     

மின்னல் தாக்கத்தினால் இளம் குடும்பஸ்த்தர் பலி




2010.10.28 ஆகிய இன்று சுமார் பி.ப  2.25 இற்கு இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்தது. சம்மாந்துறை கைகாட்டி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தகப்பனான ஆதம்லெப்பை மஹ்றூப் (வயது 37) சம்மாந்துறை அன்டிய சேகப்பற்று வயல் வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி ஸ்தலத்திலேயே மரணமானார். இவருடன் கூடச் சென்ற மருமகனான ஹசன் ஹாசிர் (வயது 17) சம்பவத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

சடலம் உடனடியாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டது. சம்மாந்துறைப் பொலிஸார் இது தொடர்பான் மேல் விசாரணைகளை நடத்துகின்றனர்.




                                                                      

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.