Friday, October 29, 2010

சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு ஒரு தொகுதி மரக்கன்றுகள் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



28.10.2010 அன்று சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்தில் சிரமதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.இதில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் ஒரு தொகுதி மரக் கன்றுகளை வழங்கி அங்கு கெளரவ தவிசாளர் அவர்களினால் மர நடும் வைபவமும் இடம்பெற்றது என்பது குறிப்படத்தக்கது.

கொழும்புப் பல்கலைக்கழக கணணிப் பிரிவின் தொழிநுட்பக் கருத்தரங்கில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவர்களும் 2010.10.29 ஆகிய இன்று கலந்து கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் தகவல் தொழிநுட்ப கருத்த்தரங்கில் கொழும்பில் தற்பொழுது கலந்து கொண்டுள்ளனர்.இதில் பல்வேறுபட்ட பயனுள்ள விடயங்களை பெற்றுக் கொண்டனர் என எமது செய்தியாளர் எம்.எம்.தில்ஷாத் தஸ்னீம் தெரிவித்தார்.மேலும் இத் தகவல் தொழிநுட்பக் கருத்தரங்கானது கொழும்புப் பல்கலைக்கழக கணணிப் பிரிவில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இம் மாணவர் குழுவை பின்வரும் ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.எம்.ஹசீம்,எஸ்.எம்.ஹில்மி, எ.பி.சம்சுனா, திருமதி.செய்னுல் ஆப்தீன்
                                                                     

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.