Saturday, October 30, 2010

ஐக்கிய அமெரிக்கா தூதரகத்தின் அதிகாரிகளால் லொத்தரி வீசா பற்றிய அறிவுறுத்தல் கருத்தரங்கு

ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளினால் லொத்தர் வீசா நிகழ்ச்சி பற்றிய விளக்கவுரை சம்மாந்துறையில் நடைபெறவுள்ளது.இலவசமாக எவ்வாறு விண்ணப்பிப்பது பற்றிய விளக்கவுரை தமிழ்,சிங்கள மொழிபெயர்ப்புடன் வழங்கப்படும்.அனைவருக்கும் அனுமதி இலவசம்.
 இடம்:அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி
திகதி : ஒக்டோபர் 31.2010
மாலை: 03.00 மணி

சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு நிதி ஒதுக்கீடு

சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய முன்பள்ளிக் கட்டிடம் திருத்துவதற்காகவும், வகுப்பறைத் தரையை செப்பனிடுவதற்காகவும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவை சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ எச்.எம்.ஹரீஸ் அவர்கள் ஒதுக்கித் தந்துள்ளார்.

பாடசாலைக் கட்டிட சிறு திருத்தத்திற்காக, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள்.

மேலும் பாடசாலை அபிவிருத்திற்காக கெளரவ விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள் என பாடசாலை அதிபர்கள் ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள் தெரிவித்தார்.


Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.