www.sammanthurai.tk என்ற இணையத் தளத்தின் மூலம் எமது ஊர் நடப்புகளை உலகளாவிய ரீதியில் எடுத்துக் கூறும் தங்களின் முயற்ச்சி வெற்றியடைய இவ்விணைய்யத் தளத்திற்கு எனது ஆசிச் செய்தியை வழங்குவதில் உளப்பூரிப்படைகிறேன்.
ஒரு சமூகம் மேன்மையடைய வேண்டுமானால் அச்சமூகத்தைப் பற்றிய நாட்டு நடப்புகள் வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் எமது சமூகத்தை விழிப்படையச் செய்ய, நீங்கள் அதி உச்சமான சேவையை முன்னெடுக்கின்றீர்கள். இச் சேவை நெடுங்காலம் நிலைத்திருக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
எமது சமூகத்தின் இளைஞர்கள் தற்போது விழிப்படைந்திருக்கிறார்கள்.எமது சமூக நலனுக்காக சுறு சுறுப்பாக இயங்க களமியங்கியிறுக்கின்றார்கள்.முன்னேற்றப் பாதையில் மிகச் சிறப்பாகப் புறப்பட்டிருக்கிறார்கள். கல்வித் துறையிலும்,தொழிநுட்பத் துறையிலும் இன்னும்மின்னும் எத்தனையோ துறைகளிலும் உயர்வடைந்திருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற-சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது.
எனவே, சமூகப்பணியில் இவர்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும். புதுவொளி பிறக்கட்டும் எனக்கூறி இவ்விணைய தளம் நின்று நீடுழிகாலம் வாழ வளர வாழ்த்துகின்றேன்.
இது-
M.L.A.அமீர் T.A
மாகாணசபை உறுப்பினர்,
கிழக்கு மாகணசபை.
2010.10.31