Tuesday, November 16, 2010

சம்மாந்துறை இணையத்தளத்தின் பெயர்ப் பலகையானது ஹிஜ்ரா சந்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.





சம்மாந்துறை இணையத்தளத்தினுடைய பெயர்ப்பலகையானது இன்று வெகு விமர்சையாக கெளரவ பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இவ் விழாவில் கெளரவ அதிதிகள் வரிசையில் ஜனாதிபதி இணைப்பாளர்கள் ஜனாப் ஏ.எல்.எம்.றசீன், ஜனாப் எம்.எம்.ஏ. காதர்(BSC) ,ஜனாப் எம்.டீ.ஏ.கரீம், ஜனாப் எம்.எல்.ஏ.மஜீத் ஆகியோரும் விசேட அதிதிளாக சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆசிரியர் ஏ.எல்.ஏ.றஹீம் அவர்களும் சட்டத்தரனி யூ.கே.சலீம் மற்றும் ஊடகவியளாலர் ஏ.ஜே.எம்.ஹனீபா,எஸ்.எல்.எம்.இர்சாத், இணையத்தள ஆலோசகர் எம்.எப்.எம்.பர்ஹான் மற்றும் எம்.எம்.சபியுல்லா  அவர்களும் சிடா அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை இன்று திடலில் நிறைவேற்றப்பட்டது.


அண்ணல் நபிகளார் சொல்லிவிட்டு சென்ற சுன்னத்துக்களை பின்பற்றுகின்ற எம் சகோதரர்களை வாழ்த்துகிறோம். அண்ணல் நபி சொல்லியவாறு பெருநாள் தொழுகைகைகளை பொது திடலில் தொழ வேண்டும் அதனடிப்படையில் இன்றுசம்மாந்துறையில் இரு இடங்களில் பொதுத்திடலில் பெருநாள் தொழுகையானது இடம்பெற்றது. அதாவது அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் அல்-அர்ஷத் மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது. இவ்வாறான நபி வழி தொழுகைகள் இடம்பெறுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமே.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.