Saturday, November 20, 2010

AUMSA இன் ஏற்பாட்டில் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு



அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் அனுசரனையில் இம்முறை க.பொ.த.சாதரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விஞ்ஞானம்,கணிதப் பாடங்களுக்கான கருத்தரங்கானது 21.11.2010 ஆகிய இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்தது. இதில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்வகளால் விரிவுரைகளானது நடாத்தப்பட்டது. அதிகளவான மாணவர்கள் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். மேலும் இக் கருத்தரங்குகான ஏற்பாடு HIGHER NATIONAL DIPLOMA IN ENGINEERING மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதலாவது ஹஜ் யாத்திரைக் குழுவானது வந்து இறங்கியுள்ளது.


இன்று காலை சுமார் 10.57 மணியளவில் முதலாவது ஹஜ் யாத்திரைக் குழுவானது இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனது ஹஜ் யாத்திரைக் குழுவானது வந்து இறங்கியுள்ளது. இதில் எமது ஊரைச் சேர்ந்த ஹஜ் யாத்திரைக் குழுவொன்றும் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் ஒரு ஹஜ் யாத்திரைக் குழுவானது தற்பொழுது சுமார் மாலை 6.00 மணியளவில் அடுத்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஹஜ் யாத்திரைக் குழுவானது வந்து இறங்கியுள்ளது.

சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுர சுற்றுவட்டமானது மரக்கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்ட முன்றலானது பூ மரக் கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது சம்மாந்துறை பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது எமது சம்மாந்துறை நகர முன்றலை அழகுபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான அழகுபடுத்தும் முயற்சியை மேற்கொண்ட சம்மாந்துறைப் பொலிஸாருக்கு எமது செய்திப் பிரிவு சார்பாக மனமுவர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.       

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.