Tuesday, November 30, 2010

அதிபரினால் ஆசிரியர் தாக்குதல் இதை எதிர்க்கும் வகையில் மஹஜர் கையளிப்பு




30.11.2010 ஆகிய நேற்று இறக்காமம் அல்-அஸ்ரப் மஹா வித்தியாலத்திற்குச் சென்ற சம்மாந்துறையைச் சேர்ந்த மாணிக்கமேடு அரசினர் கலவன் பாடசாலை ஆசிரியர் டீ.எல்.ஏ.றஸாக் அவர்கள் தனது முன்னைய பாடசாலையான இறக்காமம் அல்-அஸ்ரப் மஹா வித்தியாலத்திற்கு சம்பள உயர்ச்சிப் படிவத்தில் கையொப்பம் வாங்குவதற்காகச் சென்ற போது ஆசிரியர் இறக்காமம் அல் அஸ்ரப் மஹா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களினால் தனிப்பட்ட குரோதம் காரணமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் காயமுற்ற ஆசிரியர் தற்பொழுது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதை எதிர்க்கும் வகையில்01.12.2010 ஆகிய இன்று  இறக்காமம் கோட்டக் கல்வி வலயத்தில் கற்பிக்கும் வெளியூர் ஆசிரியர்கள் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோரி மஹஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.