Thursday, December 2, 2010

உங்கள் Mobile இல் தற்போது எமது சம்மாந்துறை இணையத்தளத்தையும் Opera Mini ஐ பாவித்து தமிழில் வாசிக்க முடியும்

01] Opera Mini உடைய Address bar ல் "opera:config" என டைப்செய்து ok யை சொடுக்கவும்.

02] பிற்பாடு கிடைக்கும் திரையில் "use bitmap fonts for complex scripts" க்கு yes  தெரிவுசெய்து save பண்ணவும்.

03] இப்பொழுது உங்களது Opera Mini யை restart செய்தவுடன் அது தமிழ் Unicode எழுத்துக்களை சரியாக  வாசிக்க உதவும்.


Visit http://www.opera.com/mobile/download/ to download Opera Mini for your mobile...

Some Most Used Nokia Phone Software


Opera Mini seems to be a free software but you will be charged by your mobile operator for GPRS data usage according to your data plan!

வருகின்ற 08.12.2010ம் திகதி சம்மாந்துறை தேசிய பாடசாலையில் A/L தினக் கொண்டாட்டமும் கெளரவிப்பு விழாவும்

சம்மாந்துறை தேசிய பாடசாலையிலே வருகின்ற 08.12.2010ம் திகதிA/L தினக் கொண்டாட்டம் 2010 மாணவர்களால் வெகுவிமர்சையாக விழாக் கோலம் பூணவுள்ளது. மேலும் இவ் விழாவிலே 2009ம் ஆண்டு பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதிபெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் விழாவானது பாடசாலை முதல்வர் எச்.எம்.பாறுக் அவர்களினால் தலைமை தாங்கி சம்மாந்துறாஇ தேசிய பாடசாலை ஆரதனை மண்டபத்திலே விழாக் கோலம் பூணவுள்ளது. பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் தொடர்பான விபரங்களுக்கு பாடசாலை இணையத் தளத்தை தரிசிக்கவும்.
                                                                      

மட்டக்களப்பில் படைஎடுத்தவை பாம்புகள் அல்ல மீன்களே(வீடியோ பதிவும் இணைக்கப்பட்டுள்ளது)

கல்லடி பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திக்கொண்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும்   அவை பாம்புகள் அல்லவென தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஒருவகை மீனினங்கள் என ம்டடக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பதில் இணைபாளர் அலி மெஹமது மெஹமட் காசீம் தெரிவித்துள்ளார்.



நேற்றைய தினம் இவை அவதானிக்கப்பட்டதாகவும் இன்றைய தினமும் அவை அவதானிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
விலாங்கு மீன் என்ற இனத்தை சேர்ந்த இந்த மீன்கள் தமது வாழ்க்கையை தொடருவதற்காக ஆறுகளில் இருந்து கடலுக்கு செல்வதையே தற்போது அவதானிக்ககூடியதாக உள்ளது.
பலரும் இது பாம்புகள் எனக்கூறுவதுடன் சுனாமி வருவதற்கான எச்சரிக்கையாகவே இந்த பாம்புகள் நீந்துவதாகவும் பதற்றத்தை தோற்றுவித்திருந்தனர்.
எனினும் அனர்த்த முகாமைத்துவ மததிய நிலையம் அனர்த்தங்கள் தொடர்பாக எந்த நேரத்திலும் தகவல்களை வழங்கும் என தெரிவித்துள்ள அலி மட்டக்களப்பு வாவியில் நீந்துவதாக கூறப்படும் பாம்புகளை போன்ற மீனினத்தை கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறப்படுகின்றது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.