Monday, December 6, 2010

வாசகர்கள் அனைவருக்கும் முஹர்ரம் வாழ்த்துக்கள்

இஸ்லாமியர்களுக்கு என்று அல்லாஹ் அனுமதித்த மற்றும் அல்லாஹ்வின் ரசூல் முகம்மது (ஸல்) அவர்கள்காட்டி தந்த இரண்டு பண்டிகைகள் மட்டுமே இஸ்லாமிய பெருமக்களுக்கு கொண்டாடபட வேண்டிய பெருநாட்கள்ஆகும். 1. அரபி மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து அந்த நோன்புகளை முடித்த பிறகு ஷவ்வால் என்ற அரபி மாதத்தில் முதல் தேதி அன்று கொண்டாடபடும் பண்டிகை. 2. துல்ஹஜ் என்ற அரபி மாதத்தில் பிறைகள் 10, 11, 12 ஆகிய மூன்று தினங்கள் மட்டும் கொண்டாடபடும் ஹஜ் பண்டிகைகள் ஆகும். அல்லாஹ் படைத்த நாட்களில் எல்லா நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இந்த நாள்தான் நல்ல நாள், இந்த நாள்தான்கெட்ட நாள் என்று எந்த ஒரு பகுத்தறிவு உள்ள மனிதனும் சொல்லிவிட கூடாது என்று சொல்கிறது இஸ்லாம்.ஆம் நண்பர்களே, ஒவ்வொரு நாளும் உலகில் நல்லதும், கெட்டதும் சேர்ந்தேதான் நடந்து கொண்டிருக்கின்றன.இன்று ஒரு இடத்தில் குழந்தைகள் பிறக்கின்றன, இன்னொரு இடத்தில் இறக்கின்றன. ஒருவருக்கு திருமணம்நடைபெறும், இன்னொருவருக்கு விபத்து நடைபெறும். ஒரு இடத்தில் வெப்பம், சூடு என்று வெயில் கொழுத்தும்.இன்னொரு இடத்தில் பனி, மழை, தென்றல், புயல், பூகம்பம் என்று இப்படி இடத்திற்கு இடம் மாறுபடுதலும் உண்டு.ஆகவே இறைவன் படைத்த நாட்களில் எந்த ஒரு நாளையும் தேர்ந்தெடுத்து இதுதான் நல்ல நாள் என்றுசொல்லுதல் கூடாது. ஆனால் தான் இறப்பதற்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால்,யூதர்களை போலவே நாமும் 10-ஆம் நாள் மட்டும் நோன்பு நோற்க கூடாது, நாம் அதற்கு வித்தியாசமாக,இன்னும் கூடுதலாக 9, 10 ஆகிய இரண்டு நாட்களும் சேர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்று வலியுறுத்திஇருக்கிறார்கள். ஆனால் அதை அறிவித்த அடுத்த வருடம் நபி (ஸல்) இந்த பூமியில் உயிரோடு இல்லை.இறைவனடி சேர்ந்தார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்). இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இந்த இரண்டு தினங்களும் நோன்பு நோற்று, இந்த சுன்னத்தான வழிமுறையைபின் பற்றுவோம், அல்லாஹ் நமது ஒரு வருட கால குறைகளையும், பாவங்களையும் மன்னிப்பான் என்று நம்பிக்கை கொண்டு அனைவருக்காகவும் நா, அனைவரும் பிராத்திப்போம். நான் எழுதியவற்றில் ஏதும் குறை இருப்பின்எனக்கு அந்த குறையை சுட்டி காட்டுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.