அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும்
மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான மூலப்பொருட்களை
பெற்றுக்கொள்வதற்கு முன்னர் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின்
அனுமதியைப் பெறவேண்டுமென அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா
தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் பரவலாக கருங்கல்,களிமண்,ஆற்றுமண் மற்றும் கிறவல்
போன்றவற்றை அகற்றுதல் அல்லது பெறுதல் போன்றவற்றுக்காக இதுவரை காலமும்
பிரதேச சபை,மாநகரசபை,நகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை
என்பவற்றிலிருந்தே முன் அனுமதி பெறப்பட்டு வந்தது.
இந்த நடவடிக்கைகளில் பல்வேறுபட்ட சிக்கல்கள் தோன்றியுள்ளதனாலும் இதனை
ஒரு ஒழுங்கமைப்பிற்குள் கொண்டு வருவதற்காகவும் ஊழல் மோசடிகளை தவிர்த்துக்
கொள்வதற்காகவும் மேற்படி நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறப்படவேண்டுமெனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.