Sunday, December 19, 2010

பல்வேறு சவால்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் மீண்டும் சம்மாந்துறை இணையத்தளம்.


பல்வேறு சவால்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலும் சம்மாந்துறை இணையத்தளமானது தமது சேவையை இன்றிலிருந்து துள்ளியமாக வழங்கக் காத்திருக்கின்றது. சில நாட்களாக தமது செய்திகளை தெரிவிப்பதில் மந்த நிலை காணப்பட்டது. ஏனெனில் எமது இணையத்தளத்திற்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு சதிச் செயல்களும் நாசகாரச் செயல்களுமே. உதாரணமாக எமது பெயர்ப் பலகை கூட நாசாகரர்களினால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல தடைக் கற்களைத் தாண்டியும் எமது இண்னையத் தளமானது தமது மீள்வருகையை உறுதி செய்துள்ளது. எதுவித இலாப நோக்கமும் இன்றி சமூகத்துக்காய் முயன்ற எமக்கு கிடைத்த பரிசுகள் ஏராளம். புகைப்படம் எடுக்கச் சென்றால் கூட பல்வேறு அசெளகரியங்கள். இவ்வாறு நாம் உழைத்தும் எமக்கு எதிர்ப்புக்களே கிடைத்தது. இருந்தும் எமது பணியானது எவருக்கும் அஞ்சி இடை நிறுத்தப்படாது என்பது திண்ணம். நாம் எமது உயிரை தியாகம் செயக் கூடத் தயார் இச் சேவைக்காக. எமது உடைமைகள் பல்வேறு நாசமாக்கப்பட்டுள்ளது. எமக்கு உதவி செய்பவர் யாரும் இல்லாஇ. தனி மரமாய் செயற்படுகிறஓம். பொதுமக்களாகிய நீங்கலே எங்களை ஊக்கமும் ஆதரவும் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம். எத் தடங்கள்களுக்காகவும் நாம் அஞ்சி எமது முயற்சி தடைப்படாது எனக் குறிப்பிடுகின்றோம்.  
                                                                       

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.