Saturday, December 25, 2010

சுனாமி தந்த வடுக்கள் எம்மை விட்டு இன்னும் அகலவில்லை…(சுனாமி நினைவுக் கவிதை)

காசு பணம் வந்த போதும்
காத்திருந்து பெற்ற கிழி
காணாமல் போன சோகமென்ன – ரதியே
காலங்கள் மறக்குமோ – ஓடிய கால்கள் மறுக்குமோ
விழிகள் உறங்காமல்
விழத்திருந்த அந்த இரவுகள்
விசைப்பலகையில் தட்டும் போதும் கனக்கிறது………
விடுகதையாய்ப்போன எங்கள் – உறவுகள்
கடல் வருகுது …. கடல் வருகுது என்ற
கூக்குரல் கேட்டதும்
குடிசைக்குள் இருந்தவளை
கூட்டப் போகலாமென நினைத்தேன்
கூச்சலிட்ட – அவள்
குரலைத்தான் கேட்டேன்……..
வேறன்ன சொல்லுவது
வயிற்றாற்ற போகும் – கடல்தாய்
அது வயிற்றாற்ற நினைத்துவிட்டாள்
வெந்துபோன என்- மனம்
அன்றய வடுக்களை இன்னும்
மறக்கவில்லை………
பிற்பட்ட காலத்தில்
பிஸாஸூகள் போல வந்த – என்ஜிஓஸ்
பிதற்றிவிட்ட பணத்தாசையால் – என்
பாசக் குடும்பத்தையும் – இழந்துவிட்டேன்
வடுக்கள் மாத்திரமல்ல
வஞ்கமான என்- நெஞ்சமும்
வகை சொல்ல காத்திருக்கிறது.
(இது விடுகதையாய்ப் போகாதே)
டிசம்மபரில்
பட்ட துன்பம் -
எத்தனை டாட் கொம் இல்
எழுதினாலும் தீராது…..
சுனாமியின் வடுக்களை தாங்கி……
(மீட்டிப்பார்க்கும் என் அனுபவம் – கவிதை வடிவில்)

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.