Thursday, December 30, 2010

ஏ.ஏச்1.என்1 பன்றிக்காச்சல் நோய் தடுப்பு மருந்து சம்மாந்துறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிராக தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் சம்மாந்துறை  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.
பன்றிக்காய்ச்சல் நோய்க்காரணியான ஏ.எச்1.என்1 வைரஸ் தொற்றுநோய் நாட்டில் தீவிரமடைந்ததையடுத்து நாடளாவிய ரீதியில் நோய்த்தொற்றினைத்தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பன்றிக்காய்ச்சல் நோய்த்தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம் பெற்று வருகின்றன. இதற்கு தேவையான மருந்து வகைகள் சுகாதார அமைச்சின் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் சுகாதார அமைச்சின் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதற்கட்டமாக அரசசேவை அலுவலகங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஆண்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பாடசாலை மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிராக தடுப்பு மருந்து பத்துவயதிற்கு மேற்பட்டோர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் இதயவருத்தம் மற்றும் உள்ளவர்களுக்கு  இத்தடுப்பு மருந்து வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையினால் நெற்பயிர்ச்செய்கை பாதிக்கும் அபாயம்

வடகீழ் பருவப்பெயர்சிசி மழையால் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்த பிரதேசங்களில் குடியிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முக்கியமாக சுனாமி யுத்தகாரனமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு மீண்டும் உறவினர்களின் வீடுகளில் தஞசமடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களில் சீரான வடிகால் அமைப்புக்கள் இல்லாததிலும் ஏற்கனவே தாழ்ந்த பிரதேசங்களாக இருந்த பகுதிகளில் மணல் நிரப்பி காரியாலயங்களும் வீடுகளும், வயல் நிலங்களுமாக மாற்றம் செய்யப்பட்டதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது. மழையோடு கடல் கொந்தழிப்புமாக இருப்பதனால் கடந்த சில தினங்களாக ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
நன்னீர் நிலயங்களில் சல்பீனியா பூண்டுகள் படர்ந்துள்ளமையால் நன்னீர் மீணவர்களும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கருவாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு திருப்பலி ஆராதனையிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளமுடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்துகளின் திரும்வெம்பாவை ஊர்வலம் நத்தார் சுரேல் கீதம் போன்ற நிகழ்வுகள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பிரதான வீதிகளில் அமைக்கப்படும் பாலங்களில் திருத்த வேலைகள் நிருத்தப்பட்டதால் சில இடங்களில் போக்கவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மலை நாட்டுப்பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த காய்கறிகளும் மழையினால் வராததால் மக்களின் அன்றாட வேளை உணவுக்காக காய்கறிகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
அரிசி,தேங்காய்,கருவாடு போன்ற அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை வாசியும் உயர்ந்துள்ளதால் மேலும் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
(மீநோடைக்கட்டு நிருபர்: ஏ.எல்.எச்.முகம்மட்)
வடகீழ் பருவப்பெயர்சிசி மழையால் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்த பிரதேசங்களில் குடியிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முக்கியமாக சுனாமி யுத்தகாரனமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு மீண்டும் உறவினர்களின் வீடுகளில் தஞசமடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களில் சீரான வடிகால் அமைப்புக்கள் இல்லாததிலும் ஏற்கனவே தாழ்ந்த பிரதேசங்களாக இருந்த பகுதிகளில் மணல் நிரப்பி காரியாலயங்களும் வீடுகளும், வயல் நிலங்களுமாக மாற்றம் செய்யப்பட்டதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது. மழையோடு கடல் கொந்தழிப்புமாக இருப்பதனால் கடந்த சில தினங்களாக ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
நன்னீர் நிலயங்களில் சல்பீனியா பூண்டுகள் படர்ந்துள்ளமையால் நன்னீர் மீணவர்களும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கருவாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு திருப்பலி ஆராதனையிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளமுடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இந்துகளின் திரும்வெம்பாவை ஊர்வலம் நத்தார் சுரேல் கீதம் போன்ற நிகழ்வுகள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பிரதான வீதிகளில் அமைக்கப்படும் பாலங்களில் திருத்த வேலைகள் நிருத்தப்பட்டதால் சில இடங்களில் போக்கவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மலை நாட்டுப்பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த காய்கறிகளும் மழையினால் வராததால் மக்களின் அன்றாட வேளை உணவுக்காக காய்கறிகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
அரிசி,தேங்காய்,கருவாடு போன்ற அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை வாசியும் உயர்ந்துள்ளதால் மேலும் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.