Monday, January 3, 2011

முதலாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்!

பிறந்திருக்கும் 2011 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாக உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் புதிய கல்வியாண்டில் 202 நாட்கள் நடைபெற வேண்டுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கான பாடசாலைத் தவணை அட்டவணை விபரம் வருமாறு,
சிங்கள தமிழ்ப் பாடசாலைகள் முதலாம் தவணை ஜனவரி 3 முதல் ஏப்ரல் 08 வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் 25 முதல் ஆகஸ்ட் 4 வரையும் மூன்றாம் தவணை செப்டெம்பர் 5 முதல் டிசம்பர் 9 வரையும்.
முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை ஜனவரி 3 முதல் ஏப்ரல் 8 வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் 18 முதல் ஜூலை 29 வரையும் மூன்றாம் தவணை செப்டெம்பர் 5 முதல் டிசம்பர் 9 வரையும் இடம்பெறும்

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.