எமது ஊரில் சில நாட்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக இன்று சுமார் அதிகாலை 1.30 மணியளவில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. மலையடிக் கிராமம் முற்றாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்மாந்துறை வீரமுனையின் சில பகுதிகளும் நீரில் மூழ்கிக் காணப்படுகிறது. சம்மாந்துறை மலையடிக்கிராம மக்கள் தமது பெயர்வை அல்-உஸ்வா அனாதைகள் இல்லத்தை நோக்கி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான படங்கள் மற்றும் மேலதிக செய்திகள் இன்னும் சில கணத்தில் வெளிவரும் காத்திருங்கள்.