கிழக்கு
மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு
அதிகரித்து வருகின்றது. இதில் எமது சம்மாந்துறை மண்ணும் கடும்
பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. மழையும் விடுவதாக இல்லை வெள்ளம்
அதிகரித்துவருகின்றது
பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்திருக்கின்றது
இதனால் மக்கள் சொல்லொனாத் துயரில் மூழ்கியுள்ளனர்.
இதன்
காரணமாக மழை மற்றும் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி விசேட துஆ
மற்றும் தொழுகைகளில் ஈடுபடுமாறு அனைத்துப் பள்ளிவாயில்களின்
ஒலிபெருக்கிகளிளும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எமது மக்களின் துயர்போக்க நாமும் பிரார்த்திப்போமாக