Sunday, January 16, 2011

கிழக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்களை நீர்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் இன்று நேரடியாகப் பார்வையிட்டார்



பெறுமளவான நெல் உற்பத்தி செய்யும் மாவட்டமான அம்பாரை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட வளத்தாப்பிட்டி குளம், வீரக்கொட அணைக்கட்டு மற்றும் அத்தியடி அணைக்கட்டு என்பவற்றை அமைச்சர் நிமால் சிறிப்பாலடி சில்வா பர்வையிட்டார். மேலும் கல்லோயா குளம் , கொண்டவட்டுவான் போன்ற குளங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். இதன் போது பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக புண்ருத்தாபனம் செய்யுமாறு உயர் அதிகாரிகளை பணித்தார். மேலும் இவ் விஜயத்தில் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, கிழக்கு மாகான சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் அவர்களும் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியளாலர்கள் மற்றும் சம்மன்துறை ஜானாதிபதி இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இலவச வைத்தியமுகாம்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர். ஏம்.எஸ். இப்றாலெவ்வை அனுசரனையில் - சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஏ. இஸ்ஸடீன் தலைமையிலான குழுவினர் 2011.01.16 மஜீட்புரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச வைத்திய முகாமை நடாத்தினர்.

இவ் வைத்திய முகாமில் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் றுக்மண் ஜயபால மற்றும் வைத்தியர்களான ஏ.ஆர்.எம். நியாஸ், எம். மர்சூக், ஏ. சபீர், ஏ. இஸ்ஸானா மற்றும் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோகர் ஐ.எல். றாஸீக் தலைமையிலான சுகாதார பரிசோகர்கள் குழுவும், தாதியர் மேற்பார்வையாளர் ரீ.எல்.ஏ. றசூல் தலைமையிலான குழுவினரும், மஜீட்புர வித்தியாலயத்தின் அதிபர் ஏ.அமீர்அலி பிரதி அதிபர் எம்.ஐ. முஸம்மில் மற்றும் ஆசிரியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் இவ் இலவச வைத்திய முகாமில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.