முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களின் தேசிய கட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும், மறைந்த மாகாண சபை உறுப்பினருமான எம்.வை.எம்.மன்சூர் அவர்களின் 21வது சிரார்த்த தினமும் கத்தமுல் குர் ஆன் நிகழ்வும் 30.01.2011 ஆகிய நேற்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தவிசாளரும், கெளரவ நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதில் கட்சி அங்கத்தவர்களும் பெருந்திரலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.