Wednesday, February 2, 2011

சம்மாந்துறையில் மீண்டும் மூன்றாவது தடவையாக வெள்ளம்




தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக சம்மாந்துறை நைனாகாட்டைச் சேர்ந்த 153 குடும்பங்கள் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக சுமார் நண்பகல் 12.00 மணியளவில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் 303 ஆண்களும், 244 பெண்களும் மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட 220 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தினால் உணவுகளானது முகாம்களில் கிராம சேவகர்களினூடாக வழக்ங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறு நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு உதவ விரும்புவோர் sammanthurainews@gmail.com/ 0752912336 இனூடாக தொடர்பு கொள்ளவும்.

இங்கினியகலா வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ள அபாயம்






இங்கினியாகல வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது ஆறுகள் மற்றும் வயல் நிலங்களில் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். தற்பொழுது மல்வத்தை மற்றும் நைனாகாடு ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் தற்பொழுது நகர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.