Tuesday, March 29, 2011

சொந்த மண்ணில் விடை பெற்றார் முரளி!

அரை  இறுதியில் நிகழ்வு

நேற்றைய அரையிறுதிப் போட்டியின் போது தமது கடைசி பந்தில் விக்கெட் ஒன்றையூம் வீழ்த்தி சொந்த மண்ணில் விடை பெற்றுக்கொண்டார். இலங்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான  முத்தையா முரளிதரன்.
இந்த உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் நேற்று அரையிறுதியில் தனது சொந்த மண்ணில் விளையாடி னார்.
ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முரளி தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் அவர் தனது சொந்த மண்ணில் வீசிய கடைசி பந்தில் ஸ்கொட் ஸ்ரைரிஸை எல்.பி.டபிள்யூ. முறை யில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது கடைசி பந்துக்கு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது.
முரளி தனது சொந்த மண்ணில் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் அவர் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் 4 ஆவது இடத்தையே பிடித்துள்ளார்.
இந்த சாதனை பட்டியலில் தென்னாரிபிக்க முன்னாள் வீரர் ஷோன் பொலக் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அடுத்து வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முரளி விளையாடவுள்ளார். இதுவே அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடும் கடைசி ஆட்டமாகவும் அமையவுள்ளது.

டெங்கு ஒழிப்புத் திட்ட வாரம் 29 ஆம் திகதி வரை கிழக்கில் தொடரும்

டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் செயற்குழுவின் டெங்கு ஒழிப்புத் திட்ட வாரம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களங்கள், கல்வியலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவர்களது நிர்வாகத்தின் கீழுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், வேறு கல்வி அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுளம்பு பரவும் இடங்களை 29 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கென மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தியோகத்தர்களை நியமித்து, அவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களிடமிருந்துஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் இச்செயற்பாட்டினைத் திறம்பட நடத்த நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்து அமுல்படுத்துவதுடன் இச் செயற்திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தனக்கு அனுப்பி வைக்குமாறும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார கேட்டுள்ளார்.

NATIONAL ICT EXCELANT AWARD 2009



பாடசாலை கணணி வல  நிலயங்கலுக்கிடைலான போட்டி நிகழ்ச்சியில்  சம்மாந்துரை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் மாகாண மட்டத்தில் 2ம் இடத்தினை பெற்றுள்ளது. இப் போட்டி நிகழ்ச்சி கல்வி அமைச்சின் செயற்த்திட்ட பிரிவில் நடத்தப்பட்டது.  இதற்க்கு 1500 000 ரூபா பெறுமதியான கணணி மற்றும் கணணி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. 
 
தகவல்.

கணணி வள நிலைய ஆசிரியர்
M.B.M.HASEEN

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.