Saturday, August 13, 2011

உலக வங்கி பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

உலக வங்கி பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் (படங்கள்)கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலமையிலான குழுவினருக்கும் உலகவங்கி பிரதிநிதிகளுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று காலை கிழக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் உலக வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையுடன் உலக வங்கி அனுசரனையுடன் மேற்கொள்ளப்பட இருக்கின்ற எதிர்கால திட்டங்கள் என்பன தொடர்பாகவும் விரிவாக ஆரயப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து உலக வங்கியானது மத்திய அரசின் அனுசரனையுடன் கிழக்கு மாகாண சபைக்கு புதிய பல செயற்த்திட்டங்களை தொடர்ந்தும் எதிர்காலத்தில் வழங்கும் எனவும் உலகவங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டயாரிடோ ஹே தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் சார்பில் சுசின் ரஸாய், சான்டியா சல்கொடா மற்றும் சீனித்தம்பி மனோகரன் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை சார்பில் விவசாய அமைச்சர் கலாநிதி து.நவரெட்ணராஜா, பிரதி பிரதம செயலாளர் திட்டமிடல் எஸ்,மகேந்திரராஜா, முதலமைச்சரின் பதில் செயலாளர் கே.கருணாகரன் பிரதி பிரதம செயலாளர் நிதி எஸ். மயுரகிரிநாதன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மர்ம மனிதனால் தாக்கப்பட்டுள்ள பெண்

பொத்துவிலில் மர்ம மனிதனால் தாக்கப்பட்டுள்ள பெண் (படங்கள்)பொத்துவில் பிரதேசத்தில் மர்ம மனிதனால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் ஒருவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் 06ஆம் வட்டாரம் கே.பி.எம்.வீதியை சேர்ந்த ஜூனைதீன் ஆஸிக் (22வயது) என்ற பெண்னே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்துவரும் நிலையில் தனது தாய் தந்தையருடன் குறித்த பெண் வாழ்ந்துவருகின்றார்.

இது தொடர்பில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று இரவு 8.30 மணியளவில் நான் வெளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது என்னை யாரோ ஒருவர் திடிரென வீட்டில் மேல் பகுதியில் இருந்து தூக்கினர்.

அங்கு பார்த்தபோது உடம்பு எல்லாம் கறுப்பு நிறத்தையுடைய ஒருவன் என்னை பிடித்திருந்தான். நான் கத்த முனைந்தபோது எனது வாய்க்குள் விரலையோட்டினான். அப்போது அந்த விரலில் ஏதோ திரவம் தடவப்பட்டதை உணர்ந்தேன்.

அப்போது அவனது கையில் கூரான ஆயுதம் இருந்தது, நான் பல தடைவ முயற்சி செய்து கத்திய போது அயலவர்கள் வரவே என்னை அவன் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என தெரிவித்தார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.