Friday, August 26, 2011

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாபாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிரேஷ்ட அமைச்சர்களான பீ.தயாரத்ன, அதாவுட செனவரத்ன, பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸனலி, பைசால் காசீம், சிறியாணி விஜேவிக்கிரம, பி.பியசேன, கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க, ரீ.நவரெட்னராஜா, அம்பாரை அரசாங்க அதிபர் சுனில்கன்னங்கரா, உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.