Thursday, October 27, 2011

சம்மாந்துறை வலயப் பாடசாலைகளுக்கு கணனி மற்றும் பாடசாலை மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு


இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலயத்தில் சம்மாந்துறை வலையக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டின் கீழ் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு கணனிகள்,பாடசாலை மாணவா்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சா் விமலவீர திசானயக்க அவா்களும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சா் எம்.எஸ். உதுமாலெவ்வை அவா்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினா்களான எம்.எல்.ஏ. அமீா் அவா்களும், எஸ் புஷ்பராஜா அவா்களும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளா் எம்.கே.எம். மன்சூா் அவா்களும் கலந்துகொண்டனா்.இக் கணனிகள் கிழக்கு மாகாண முதலமைச்சா் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவா்களின் வேண்டுகோலுக்கிணங்க இந்திய அரசின் உயரிஸ்தானிகத்தினால் வழங்கப்பட்டது. மேலும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சம்மாந்துறை வலயத்திற்குகுட்பட்ட பாடசாலை மாணவா்கள் 180 பேருக்கு  துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்து.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.