Thursday, November 3, 2011

இலங்கையிலுள்ள தேசிய கல்லூரிகளில் 2012 ஆம் வருடத்துக்குப் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கேற்ப அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 16ஆம் திகதியும் 17ஆம் திகதியும், மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 26ஆம் திகதியும் 27ஆம் திகதியும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 19ஆம் திகதியும் 20ஆம் திகதியும்,  வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 21ஆம் திகதியும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.  


இத்திகதிகளில் முதலாம் மொழி தமிழ், விசேட கல்வி, இஸ்லாம் ஆகிய பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை தமிழ் மொழியில் இடம்பெறவுள்ளது. 


இந்தப் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை இதுவரை நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக்கடிதங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி நிருவாகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

தகவல்:
எம். ஐ. எம். நவாஸ்
உப-பீடாதிபதி
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி
0714286891

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.