சம்மாந்துறை பிரதேசத்திக்கான “வாழும் கலை இலக்கிய வட்டம்” (Live Art & Literature Circle) அதன் அங்குராப்பண நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. சாம்மாந்துறை அமீர் அலி நூலக கேட்போர் கூடத்தில் 2012.01.11 4.00 மணியளவில் நடைபெறற இந்நிகழ்வில் சம்மாந்துறையின் மூத்த இலக்கிய வாதியும் சமூக ஆர்வலருமாகிய கலாபூசணம் மாறன் யூ செயின் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளினைக் கொண்டு இவ்வமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது அமைப்பிற்கான நிர்வாகத் தெரிவும் இடம் பெற்றது இதில் தலைவராக M.M.சமீர் உப தலைவராக M.I.M.அர்ஷத் செயலாளராக M.T.முஜாஹிடீன் உப செயலாளராக U.L.M.ரிபாஜ் பொருளாளராக M.I.M.சாக்கீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அமைப்பின் முதற்கட்ட செயற்பாடாக சம்மாந்துறைக்கான ஆவணங்களை சேகரித்தலும்; ஆவணப்படுத்தலும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.