Saturday, January 14, 2012

சாந்தி வேண்டிப் பொங்குவோம்.

எத்தனையோ பொங்கல் எங்கள் தமிழ் பண்பாட்டில்
சர்க்கரைப் பொங்கல் சந்தணப் பொங்கல்
பால்ப் பொங்கல் பழப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல்
இன்னும் எத்தனையோ எம்மிடத்தில் இருந்தும்..... 

மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயல் காட்டை உழுது பச்சை வயலாக்கி
பருவத்தோடு கதிர்பறிய போடியார் வட்டைக்குள்
வேளாமை வெட்டப்போய் ஊரெல்லாம் சீதேவி
உணவளிக்க உதவிய ஞாயிற்றுக்கு நன்றி சொல்லும்
தமிழ் பொங்கலே...  தைப் பொங்கல் 

பகலவன் கோலம்போட பறவைகள் பண்ணிசைக்க
மலர்கள் மணம் பரப்ப மரங்கள் தலையசைக்க
மட்டக்களப்பு பால்சேத்து யாழ்ப்பாண வெல்லமிட்டு
திருமலை அறுசுவை சேர்து வவுனியா பழமிட்டு
அம்பாரை அரிசு அனைத்தையும் ஒன்றுசேர்த்து 
பொங்குவோம் பொங்கல்
வெள்ளம் மடைதிறந்து வேகமாய்ப் போவதுபோல்
நம் உள்ளத்து வேதனைகள் இல்லாது பொங்குவோம்.. 
இன்னும் எனது நாட்டில் எனது மண்ணில்
தூர விரட்டப்பட்டு தூங்கக்கூட இடமில்லாத
துணியைத் தொட்டிலாக்கி பனியிலும் மழையிலும்
படுத்துறங்கும் எம் இனத்தின் சாந்தி வேண்டிப் பொங்குவோம்.
பண்பாடு பறித்தெறியப்பட்டு சமயம் சபைக்காகாமல்
விழுமியம் வெறுக்கப்பட்டு வெட்கத்தினை விலைகேட்கும்
அநாகரிகம் அழியப் பொங்குவோம்.
இமைமூடிய பொழுதிலும் உன் நினைவுகளை
மூடாமல் மனக்கதிரையில் சிம்மாசனம் தந்து
மரணத்தின் கடைசி மூச்சிலும் உயிரையே
சுவாசிக்கும் காதலரை வாழ்த்திப் பொங்குவோம்.
பசிபோக்கப் பொங்குவோம் பாவம் அழியப் பொங்குவோம்
அநாதைகள் இல்லையென அறைகூவிப் பொங்குவோம்
அன்பை பகிரப் பொங்குவோம் அறிவை ஊட்டப் பொங்குவோம்
துயரில் கைகொடுக்கப் பொங்குவோம் துட்டரை விரட்டப் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல் எங்கும் அன்புப் பொங்கல்.....

ஏ.எல். பரீட்சை - நிபுணர் குழுவின் அறிக்கையை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது

2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் தொடர்புடை பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. பெறுபேறுகள் தொடர்பாக ஏற்பட்ட தவறுகளை குறுகிய காலத்திற்குள் பரீட்சைகள் திணைக்களம் திருத்தியுள்ளமை தமது நிலைப்பாடென குறித்த குழுவினர் அறிவித்துள்ளனர்.
பரீ்ட்சைப் பெறுபேறுகளை கணிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையின் போதே மாவட்ட தரப்படுத்தல் தொடர்பான குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
திருத்தம் மேற்கொள்ளப்பட்ட, மாவட்ட தரப்படுத்தலுடன் கூடிய பரீட்சைப் பெறுபேறுகள் தவறுகளின்றி உரிய முறையில் வெளியிடப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குளறுபடிகளுக்கு காரணமான விடயங்களை நீக்குவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பரீட்சார்த்திகள் தமது பிரச்சினைகளை சமர்ப்பிக்குமாறு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட செய்திகளுக்கு அமைய கிடைத்த மேன்முறையீடுகளை விசாரணை செய்தபோது பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பான தகவல்கள் ஆதாரங்களுடன் நிரூபனமாகவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான அறிவித்தலை விடுக்கும் போது அதிகளவிலான புத்திஜீவிகளிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டுமென நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனைத் தவிர இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளையும் ஜனாதிபதி நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் பரீட்சைகள் திணைக்களம் தமது தொழிநுட்ப பிரிவுக்காக முழுநேர தொழிநுட்ப ஆலோசகரின் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பரீட்சை நடவடிக்கையின் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தற்கால ஆய்வொன்றை துரித கதியில் மேற்கொள்வதன் மூலம் ஏற்பட்டுள்ள தவறுகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் தாரா விஜதிலக்க தலைமையிலான நிபுணர் குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்த்தன, ஊவ வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரஞ்ஜித் பிறேமலால் டி சில்வா, றோயல் கல்லூரியின் அதிபர் உபாலி குணசேகர ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

சம்மாந்துறையில் மேலும் ஓர் மாணவன் சட்டக் கல்லூரிக்குத் தேர்வானார்

சம்மாந்துறை மண்னை பிறப்பிடமாக கொண்ட U.L.MOHAMED SAMEEM  என்பவர்2012/01/10  சட்டக் கல்லூரி அனுமதியை பெற்றுள்ளார்.

மேலும் அவருக்கு கிடைத்த சட்டக் கல்லூரி அனுமதியையிட்டு எமது SAMMANTHURAI.TK நிறுவனம் வாழ்த்துகலையும் பாராட்டுகலையும் தெரிவிக்கிரது.

அமைச்சர் மர்ஹும் அப்துல் மஜீட் அவர்களுக்கு நினைவு நிகழ்வு




இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்UNIVISON  இன் ஏற்பாட்டில் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் மர்ஹீம் அமைச்சர் அப்துல் மஜீட் அவர்கலுக்கான நினைத்தல் நிகழ்ச்சி இன்று இடம் பெற்றது.இதில் துஆ பிராத்தனை,நினைவுரைகள்,போன்ற பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் இடம் பெற்றன.இந்த நிகழ்வில், கெளரவ அமைச்சர்  P.THAYRATHNA, பேராசிரியர்                 S.M.ISMAIL   (lexure seusl), தவிசாலர்(str)                     A.M.M. NOWSHADஇதன் போது ஆளுமையின் அடையாளம்  என்ற நூல்  வெளியிடப்பட்டது.




Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.