Thursday, January 26, 2012

இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகாரிக்க முடியாது என சவூதி அரசு கை விரிப்பு!

இலங்கைக்கான ஹஜ் யாத்திரிகர்களின் கோட்டாவை அதிகாரிக்குமாறு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


தற்போது மினாவிலுள்ள வசதிகளை கருத்தில் கொள்ளும்போது இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என சவூதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜித்தாவிலுள்ள ஹஜ் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை சந்தித்தபோதே அமைச்சர பௌசி இந்த வேண்டுகோளை விடுத்தார். சென்ற வருடம் ஹஜ் யாத்திரிகர்களின் கோட்டா 2800 பேராக இருந்தது. இது இறுதி நேரத்தில் 3800 ஆக அதிகரிக்கப்பட்டபோது இந்த அவசர நிலைமையை பயன்படுத்தி ஹஜ் யாத்திரை ஒழுங்கு செய்யும் முகவர்கள் கூடிய இலாபமீட்டினர் என அமைச்சர் பௌஸி இதன்போது விளக்கினார்.

எனினும் இம்முறை ஒரே தடவையில் கோட்டா வழங்கப்படுமென சவூதி அமைச்சர் கூறியதாக அமைச்சர் பௌஸி தெரிவித்தார். 2010 இல் வழங்கப்பட்ட கோட்டாவான 5800 பேரை இம்முறையும் வழங்கும்படி கேட்டு கொண்டதாக அமைச்சர் பௌஸி மேலும் கூறினார். இந்த சந்திப்பில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை கௌன்ஸல் டாக்டர் ஏ.உதுமாலெப்பையும் கலந்து கொண்டார். METROMIROR.COM

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்


அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் அனைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் இனைந்து கூட்டுக் குழு இன்று 26.01.2012 ஆம் திகதி வியாழக்கிழமை முழு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற தீர்மானத்துக்கமைவாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இவ் அடையாள வேலை நி று த்ததில் ஈடுபட்டுள்ளது இதன் காரணமாக அலுவலக வேலைகள் அனைத்தும் இஸ்தம்மிதம் அடைந்து காணப்படுகின்றது.

இவ்அடையாள வேலை நிறுத்தமானது சகல பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.