சென்ற வருடம்; வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி நூலகத்தினால் நடாத்தப்பட்ட வாசிப்பு மேம்பாட்டிற்கான கட்டுரை கவிதை போட்டிகளில் பங்குபற்றி வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2012.01.27ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 2011 ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற புத்தகக் கண்காட்சியில் பங்குபற்றிய நிறுவனங்கள் ற்றும் பாடசாலைகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் இந் நிகழ்வுக்கு அதிதிகளாக
உதவி உள்ளூராட்சி ஆணையாளர்- ஏ.ஜே.எம்.இர்ஷாட்
பிரதேச செயலாளர் - ஏ.மன்சூர்
பிரதேச சபைத் தவிசாளர் - ஏ.எம்.எம்.நௌஷாத்
பிரதேச சபை உதவி தவிசாளர் - ஏ.கே.கலீலுர் ரஹ்மான் ஆகிய பலரும் கலந்து சிறப்பித்தனர்.