அரசாங்கத்தின் எரிபொருள் மாணியம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்திலுள்ள வருமானம் குறைந்த மண்ணெண்னை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மாணிய அட்டை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.காதர்,முன்னாள் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.தம்பிக்கண்டு, சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்திஅத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1700க்கு அதிகமான குடும்பங்களுக்கு மண்ணெண்னை எரிபொருள் மாணியம் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
.metromirror.lk (pohoto)