Monday, February 27, 2012

நபி(ஸல்) அவர்களின் வருகைபற்றி முன்னறிவிக்கும்1500வருடங்கள் பழமைவாயந்த பைபிள் துருக்கியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

1500வருடங்கள் பழமைவாய்ந்த இரகசியபைபிள் துருக்கியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.இந்நூலில் நபி(ஸல்) அவர்களின் வருகைபற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இயேசுகடவுள் அல்ல, மாறாக மனிதர் என்றே இன்ஜீல் வேதம் கருதுவதாக இஸ்லாமியநம்பிக்கை கூறுகின்றதுடன்,இப்பழமைவாய்ந்த நூலானது திருத்துவக் கொள்கையை முற்றாக நிராகரிப்பதுடன் நபி(ஸல்) அவர்களின் வருகையைப்பற்றி இயேசு முன்னறிவிப்புசெய்வதாகவும் துருக்கியின் கலாச்சார மற்றும் உல்லாசத்துறை அமைச்சரான எட்துகுரல் குனாய் செய்தி நிறுவனமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.1500 வருடங்கள் பழமைவாய்ந்த இவ்வேதநூலானது பர்னாபஸ் கிறிஸ்தவநூலாக இருக்கும் என நம்பப்படுகின்றதுடன்,முஸ்லிம்களால் இது உண்மையான இன்ஜீல் வேதம் என நம்பப்படுகின்றது. சென்.பர்னாபஸ் சைப்ரஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் ஸ்தகபராக பராம்பரிய முறையில் அடையாளப் படுத்தப்படுகின்றார்.விலங்குகளின் தோலில் எழுதப்பட்டுள்ள இப்பைபிள்ளானது உண்மையான பதிப்பாக இருக்க முடியமானதுடன், இஸ்லாத்தோடு இது உடன்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கிறிஸ்தவ உலகின் பிரதான தளமான வத்திக்கானினால் 1500வருடங்கள்
பழமைவாயந்த பைபிள் நூலை கையளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.துருக்கியின் தலைநகர் அங்காரவில் அமைந்திருக்கும் அங்காரா இனஅமைப்பியல் அருங்காட்சியகத்தில் இப்பைளிலானது தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன்,
இப்பழiவாய்ந்த பைபிளின் பெறுமதி 28மில்லியன்(40மில்லியன் லீரா) அமெரிக்கடொலருக்கும் அதிகமானதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்; தமிழ் மக்களும் பங்கேற்பு!

ஐ.நாவின் மனித உரிமை 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுள்ளன.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் சிங்கள, தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில பரவலாக நடைபெற்றன.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று நிந்தவூர் சம்மாந்துறை போன்ற இடங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் காத்தான்குடி ஓட்டமாவடி மற்றும் மட்டக்களப்பு நகரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.

ஏறாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஏறாவூர் நகர முதல்வர் அலி சாகிர் மௌலானா உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதே வேளை திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேன தலைமையில் ஆலையடிவேம்பில் இடம்பெற்ற ஆர்ப்பாடத்தில் அதிகளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கும் வகையிலும் அமெரிக்கா பிரித்தானியா உட்பட பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு வாசக அட்டைகளை ஏந்நியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

சில பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் கலந்து கொண்டதையும் காணக் கூடியதாகவிருந்தது.

ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்ற தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வழமைநிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களின்போது சில இடங்களில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒமாமாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.