இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டை கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஊர்வலம் இன்று புதன்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்மா பள்ளிவாசலிலிருந்து ஹிஜ்றா சந்திவரை இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹறூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உட்பட சகல பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு தமது எதிப்பை தெரிவித்தனர்.