பங்களாதேசத்திற்கான சவுதி அரேபியா தூதுவர் காலிப் அல் அலி, தலைநகர் டாக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகிறதுசவுதி அரேபியா தூதுவர் காலிப் அல் அலி நேற்று மாலை தனது உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவர துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு தப்பியோடி விட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த தூதர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் முன்பே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவி்த்தனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் சவுதியில் 8 வங்கதேசத்தினர் கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் பொலிசார் கூறுகின்றனர்.
சவுதி தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன. வங்கதேச நாட்டிற்கு சவுதி அரேபியா பல வழிகளில் பெருமளவு நிதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த தூதர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் முன்பே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவி்த்தனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் சவுதியில் 8 வங்கதேசத்தினர் கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் பொலிசார் கூறுகின்றனர்.
சவுதி தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன. வங்கதேச நாட்டிற்கு சவுதி அரேபியா பல வழிகளில் பெருமளவு நிதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
metromirror