Thursday, March 22, 2012

ஒன்பது மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றம்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

இதன்படி அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன

8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை


ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

பங்களாதேஷ்- சீனா- கொங்கோ- கியூபா- ஈக்குவாடோர்- இந்தோனேசியா- குவைத் மாலைத்தீவு- மைவுரிடானியா- பிலிபைன்ஸ்இ-கட்டார்- ரஸ்யா- சவுதி அரேபியா- தாய்லாந்து- உகாண்டா.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-

அவுஸ்திரேலியா- பெல்ஜியம்- பெனின்- கெமரூன-இ சிலி- கொஸ்டரீக்கா- செக் குடியரசு- கோத்தமாலா- ஹங்கேரி- இந்தியா- இத்தாலி- லிபியா- மொரிடஸ்- மெக்சிகோ- நைஜீரியா- நோர்வே- பெரு- போலந்து- மோல்டோவா- ரோமானியா- ஸ்பெயின்- சுவிட்ஸர்லாந்து- ஐக்கிய அமெரிக்கா- உருகுவே.

வாக்களிக்காத நாடுகள்:

அங்கோலா- போர்சுவானா- பேர்கினா பசோ- ஜிபூடி- ஜோர்தான்- கிர்கிஸ்தான்- மலேசியா- செனகல்.(எம்.ரி.-977)

தனியார் வைத்தியக் கல்லூரி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!


மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி அமைப்பது தொடர்பான ஆய்வூகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.


அலரி மாளிகையில் வைத்து சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கையை கையளித்தார். இது தொடர்பான நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர- சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேரு ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)

அல் மதீனாப் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும்



சம்மாந்துறை அல் மதீனாப் பாடசாலையில் இன்று கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்(டி.ஏ) அவர்களின் தலைமையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்இ தடம் புத்தக வெளியீடும் இடம் பெற்றதோடு ஓய்வு பெற்ற அதிபருக்கான கௌரவிப்பு நிகழவும் இடம்பெற்றது. இதில் கௌரவ அதிதிகள் வரிசையில் சம்மாந்துறை வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர்களான திரு.அஸீஸ் முகைதீன் அவர்களும் எச்.எம்.பாறூக் அவர்களும் ஜானாதிபதி ஒருங்கிணைப்புச் செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.