Saturday, March 24, 2012

பிரதேச சாஹித்திய கலாசார விழா

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் பிரதேச ரீதியாக நடத்தப்பட்டுவரும் பிரதேச சாஹித்திய கலாசார விழா சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 22-03-2012 வியாழக்கிழமை நடைபெற்றது. கலை நிகழ்வுகள்,சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொணடு வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. சம்மாந்துறை பிரதேச செயலக சாஹித்திய கலாசார பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சாஹித்திய கலாசார பேரவையின் பிரதித் தலைவர் கலாபூஷனம் மாறன் யூ.செயின் ஆகியவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நாடுபூராகவும் ‘ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம்’ ஆரம்பம்

மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை தைக்கா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் (ஐ.பி), பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ. ஜப்பார், ஜனாதிபதி இணைப்பாளர்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.