Wednesday, September 12, 2012

கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கே! மத்திய அரசிலும் இரு அமைச்சுகள்; ஜனாதிபதி தீர்மானம்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
 அதேவேளை மத்திய அரசாங்கத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்இ தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கவும் அக்கட்சியின் மேலும் மூன்று எம்.பி.க்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அறிய வருகின்றது.

கிழக்கில் ஆட்சி அமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து கொள்ள வேண்டுமாயின் தாம் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தலைவர் ஹக்கீம் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.

அவற்றுள் உள்ளடங்கிய கோரிக்கைகளில் சிலவையே மேற்படி விடயங்களாகும். இவற்றை ஏற்பதாக அறிவித்துள்ள ஜனாதிபதிஇ அம்பாறை கரையோர மாவட்ட கோரிக்கையை பிறகு பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார் என அறிய முடிகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகின்ற நிலையில் அரசுஇ முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பது பற்றி தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அரசின் இந்தத் தீர்மானம் நேற்றிரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கு மாகாண ஆட்சியை எவ்வாறு அமைப்பதுஇ மாகாண அமைச்சுகளில் எவரை நியமிப்பது என்பன உட்பட்ட பல விடயங்களை மு.கா.வுடன் பேச ஜனாதிபதியின் பணிப்பில் உயர்மட்ட அமைச்சர் குழுவொன்று தயாராகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது விடயத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம்இ தமது கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி முடிவுகளை எடுக்கும் வரை அரச தரப்பு காத்திருப்பதாக மேலும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இன்று இரவு அல்லது நாளை காலை முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்கும் என மு.கா.தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை 5069 மாணவர்கள் மேலதிகமாக பல்கலைக்கழகங்களிற்கு சேர்த்துக்கொள்ளப்படுவர்

2011ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி ஏற்பட்ட இசெட் புள்ளி பிரச்சனைக்கு தீர்வாக 5,609 மாணவர்களை மேலதிகமாக நடப்பு ஆண்டில் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளும் படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வழமையாக ஒவ்வொரு ஆண்டிலும் 21,500 மாணவர்கள் நடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களிற்கு அனுமதிக்கப்படுவர்.

2011ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களது இசெட் புள்ளி பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை ஆராய்ந்து உரிய தீர்வினை முன்வைக்கும் படி நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் அணைக்குழு 3 தீர்வினை முன்வைத்திருந்தது.

இவற்றில் ஒன்று பல்கலைக்கழகங்களிற்கு மேலதிகமாக மாணவர்களை உள்வாங்குவது ஆகும்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.