சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு முன்பாக இன்று மாலை 5மணியளவில் மக்கள் கூட்டம் அதிசய செய்தியொன்றின் பரவலையடுத்து வெகுவாக திரண்டிருந்தனர்.
அவித்த இறைச்சித் துண்டொன்றை வெட்டிய போது அதில் அல்லாஹ் என்று அரபியில் குறிப்பிட்டிருப்பதாக கூறி அதனைப் பார்க்க பொதுமக்கள் திரண்டு
கொண்டிருக்கின்றனர். இதனைப் பலர் தங்களது கைத்தொலைபேசிகள், புகைப்படக்
கருவிகள் போன்றவற்றில் படம் பிடித்து செல்கின்றனர். இது தொடர்பான மேலதிக
செய்திகளை எதிர்பாருங்கள்