நாட்டிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றவென மேலும் 6000 அதிபர், ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவிக்கிறது.
இலங்கை அதிபர் சேவை தரம் 2, தரம் 3 ஆகிய இரு தரப்பினர்களுக்கும் 3000 அதிபர்களும், இலங்கை ஆசிரியர் சேவை 3க்கு 3000 பட்டதாரி ஆசிரியர்களும் புதிதாக நியமனம் பெறவுள்ளனர்.
இலங்கை கல்வி நிருவாக சேவையின் 3ஆம் தரத்திற்கு திறமை சேவை மூப்பு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவான அதிபர் சேவை தரம்1ஐச் சேர்ந்தவர்களுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இந்த மூன்று பகுதியினருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கோட்டபாய ஜயரட்ன அறிவித்துள்ளார்.