ஹிஜ்ரி 1433 புனித துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (2012-10-16) செவ்வாய்க்கிழமை இரவு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படவில்லை. இதற்கமையவே 27ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புனித துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையினைத் தீர்மானிக்கும் மாநாடு
இன்று செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய
பள்ளிவாசலின் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை பிரதிநிதிகள்,
கொழும்பு பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாசார
திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் ஷரீயா கவுன்ஸில் பிரதிநிதிகள் உட்பட பலர்
கலந்துகொண்டனர்.
புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்
என்று நாட்காட்டிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமைமை குறிப்பிடத்தக்கது.