Thursday, October 18, 2012

வேலைவாய்ப்பு


சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வு


 Green Flowers விழிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 18-10-2012ம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.00 மணிக்கு, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு  தினம்-2012. நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் வெள்ளைப் பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. பிரெய்ல் புள்ளி முறையில்  பரீட்சைகளில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு காசோலைகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அமைப்பின் உறுப்பினர்களுக்கும் அமைப்பினால் வெள்ளைப் பிரம்புகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.;
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சுதேச வைத்திய மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி U.L.M.பசீர் அவர்களும் விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் கலீலுர் ரஹ்மான் அவர்களும் மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மீன்களின் சுனாமி - சூரை மீன்கள் படையெடுப்பு

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் பெருமளவான மீன்கள் படையெடுத்து வருகின்றன.
பெருமளவிலான மக்கள் இதனைப் பார்வையிடச் செல்கின்றனர். மீனவர்களும் அதிகளவான மீன்களைப் பிடித்து விற்பனை செய்கின்றனர். மற்றும் மீன்கள் மலிவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

நிந்தவூர் மதீனா வித்தியாலயதிற்கு கௌரவம்






2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் செல்வன். ZTM .ஆஷிக் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார். மாத்தறை ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப் பதக்கத்தினையும் குண்டு போடுதலில் 11 .85 மீற்றர் தூரம் ஏறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.

இதன் மூலம் தான்  கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும் கிழக்கு மாகாணதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் தங்க மகன் ஆஷிக் அவர்களுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17 .10 .2012 )தனது சொந்த பாடசாலையான நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அல்ஹாஜ் அஹமது தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீ, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி திருமதி SM ஜலீல், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி SLM சலீம், சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்களான MI இப்ராஹீம், A  ஜாபிர் கபூர் மற்றும் வங்கி முகாமையாளர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்


Sulaiman Raafi

கிழக்கிற்கு பெருமை தந்த தங்க மகன்








2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி பயிலும் செல்வன். ZTM ஆஷிக் அவர்கள் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும், குண்டு போடுதல்  நிகழ்ச்சியில் வெண்கலப்பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார் 

மாத்தறை DA ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப்பதக்கத்தினையும், குண்டு போடுதலில் 11 .85    மீற்றர் தூரம் ஏறிந்து  வெண்கலப்பதக்கத்தினையும் சுவீகரித்தார். இதனை விடுத்து 2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலை விளையாடு  விழாவிலும், இளைஞர் கழக விளையாட்டு விழாவிலும்  ZTM ஆஷிக் அவர்கள் ஈட்டி எறிதல், பரிது வட்டம் வீசுதல் மற்றும் குண்டு போடுதல் நிகழ்சிகளில்  கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். இதேவேளை தான் கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும், கிழக்கு மாகானதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் தங்க மகன்  ZTM ஆஷிக் அவர்களுக்கு சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் A ஜாபிர் கபூர் மற்றும் நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் AL அனஸ் அஹமட் அவர்களும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். 

இது தவிர தங்க மகனுக்கு பாடசாலை மாணவ மாணவிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள், பொது அமைப்புக்கள், ஊர் மக்கள் என பலராலும் மாபெரும் வரவேற்று அளிக்கப்பட்டதோடு ஊர்வலமாகவும் அழைத்துசெல்லப்பட்டார். 

மேலும் தங்க மகனுக்கு இன்று 17.10.2012  (புதன்கிழமை) தனது சொந்த பாடசாலையான நிந்தவூர்  அல் மதீனா மகா வித்தியாலயத்தில் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அல் ஹாஜ் S  அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலகமும், அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.  


(சுலைமான் றாபி) 

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.