சம்மாந்துறை அல்வஸத் பாலர் பாடசாலையில் நேற்று (2012-10-20) சனிக்கிழமை கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
பாடசாலை மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் கைப்பணிகளும், அவர்களின் ஆக்கத்திறனைத் தூண்டக்கூடிய வித்தியாசமான பல்வகை ஆக்கப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாடசாலை மாணவர்கள் பெற்றோர் மற்றும் சிறுவர்கள் பலரும் பாலர் மாணவர்களின் இக்கண்காட்சியைக் காணவந்திருந்தனர்.