Wednesday, November 21, 2012

இஸ்லாமிய புதுவருடத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொண்டாட்டம்


வௌ்ளிக்கிழமை (16.11.2012) ஆரம்பமான இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1434முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொறலை அஹதிய பாடசாலையுடன் இணைந்து பாடசாலையின் அதிபர் ஷிப்லி ஹாசிம் தலைமையில் முஹர்ரம் பிரதான நிகழ்வை தெமடகொட வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இல் நடாத்தியது.
மேற்படி நிகழ்வில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மேலதிகச் செயலாளர் எம்.ஐ.அமீர்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவிஉதவிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன், ஜனாதிபதியின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஹஸன் மௌலானசரத் ஹெட்டியாராச்சி, , மற்றும் அஹதியாப் பாடசாலைகளின் சம்மேளன அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பணிப்பாளர் நவவிஹஸன் மௌலானாஅருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி,அஹதியா பாடசாலை அதிபர் ஷிப்லி ஹாசிம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
அஹதியாவின் 25 வருட கால சேவையை பாராட்டி அதிதிகளால் ஷிப்லி ஹாசிமுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
Hijri1
Hijri8
Hijri7
Hijri2

வாகன விபத்தில் ஒருவர் பலி

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று, கோமாரி பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் அக்கரைப்பற்று- மட்டக்களப்பு தனியார் பஸ்ஸின் நடத்துனருமாவர்.

பயணிகளுடன் மட்டக்களப்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முற்பட்ட போது மிதிபலகையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதனால், இவரின் தலையில் பஸ் ஏறியமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொட்ர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் விஜயரத்தின தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 






கமு/ சது/ முஸ்லிம் முஸ்லிம் மகளிர் வித், 2013ற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்


கமு/ சது/ முஸ்லிம் முஸ்லிம் மகளிர் வித், 2013ற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்
புதிய மாணவர்கள சேர்ந்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் 2012.11.21ஆந் திகதி முதல் பாடசாலையில் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
சிறந்த கல்விச் சமூகம் ஒரு நாட்டிற்கும், அந்தச் சமூகத்திற்கும், அந்த பிரதேசத்திற்கு சிறந்த சொத்தாக காணப்படுகின்றது. அவ்வாறான பணிகளை 1938ம் ஆண்டு தொடக்கம் இந்த மண்ணிலிருந்து செய்து வரும் இந்த பாடசாலையானது பல கல்விமான்களை பல அறிஞர்களையும் இந்த சமூகத்திற்கு வழங்கி அதன் பெருமையை நாளாந்தம் தெரியப்படுத்திக்கொணடிருக்கின்றன.

இந்த  வகையில் அதன் வளர்ச்சியிப்பாதையில் அதற்கான ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் சம்மாந்துறை சமூகத்திற்கும், ஏனைய அரசியல்வாதிகளுக்கும் நன்றிகளைச் சொன்னால் ஒன்றும் சேர்வடைந்து போவதில்லை.
மேலும் பல சாதனைகளை நடாத்த திட்டமிட்டுல்ல இந்தப்பாடசாலை எதிர்வரும் காலங்களில் ஒரு சிறந்த ஆரம்ப நிலைப்பாடசாலையாக தோற்றம் பெறுவதற்கான முனைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றது. அதன் ஊடாக ஆரம்ப மாணவர்களின் கல்வி நிலையை விருத்தி செய்து அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதன் ஈடாக சிறந்த கல்விச் சமூகத்தை பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்கு வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
-    ஏ.எம்.தாஹா நழீம்

21-11-12 பாலின்ரோம் திகதி

பாலின்ரோம் palindrome என்பது ஒரு வார்த்தை அல்லது ஒரு எண்தொடர் அல்லது ஏதோ ஒரு வரிசை, முன்னால் இருந்தோ அல்லது பின்னால் இருந்தோ வாசிக்கும் போது ஒரே மாதிரியாக அமைந்திருத்தல் ஆகும்.

உதாரணமாக “விகடகவி“ என்ற சொல்
“மாடு பாடுமா“ என்ற வசனம் பொன்றவை
இது போலவே திகதிகளிலும் பாலின்ரோம் திகதிகள் உண்டு

அவ்வாறான ஒரு திகதியே 21-நவம்பர்-2012 ஆகும் அதாவது இதனை எழுதும் போது திகதி-மாதம்-வருடம் என்ற ஒழுங்கில் எழுதும் போது 21-11-12 என வரும் . இவ்வாறான திகதிகள் அரிதாகவே காணப்படகின்றன.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.