வௌ்ளிக்கிழமை (16.11.2012) ஆரம்பமான இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1434முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொறலை அஹதிய பாடசாலையுடன் இணைந்து பாடசாலையின் அதிபர் ஷிப்லி ஹாசிம் தலைமையில் முஹர்ரம் பிரதான நிகழ்வை தெமடகொட வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இல் நடாத்தியது.
மேற்படி நிகழ்வில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மேலதிகச் செயலாளர் எம்.ஐ.அமீர்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி, உதவிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன், ஜனாதிபதியின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஹஸன் மௌலான, சரத் ஹெட்டியாராச்சி, , மற்றும் அஹதியாப் பாடசாலைகளின் சம்மேளன அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பணிப்பாளர் நவவி, ஹஸன் மௌலானா, அருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி,அஹதியா பாடசாலை அதிபர் ஷிப்லி ஹாசிம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
அஹதியாவின் 25 வருட கால சேவையை பாராட்டி அதிதிகளால் ஷிப்லி ஹாசிமுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.